தந்தையும் மகனும் ஒரே கயிற்றில் தூக்கு...! செல்போனின் விளைவு...!

தந்தையும் மகனும் ஒரே கயிற்றில் தூக்கு...! செல்போனின் விளைவு...!

குன்றத்தூர் அடுத்த பழந்தண்டலம், திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் சுந்தர்(40), அவர் கார்பெண்டர் வேலை செய்து வந்தார். இவருக்கு தினேஷ்குமார், நவீன்குமார் என இரண்டு மகன்கள் உள்ளனர். நவீன்குமார் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். மேலும் நவீன்குமார் அதிகமாக செல்போனில் விளையாடியதை அவரது தந்தை சுந்தர் கண்டித்துவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. 

இதனால் மணமுடைந்த நவீன்குமார் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தந்தை அறையில் சென்று பார்த்த போது நவீன்குமார் தற்கொலை செய்து கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து அவரது உறவினர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார். பின்னர் நவீன்குமார் உடலை மீட்டு அழுது கொண்டிருந்த நிலையில், தன்னால் தான் தனது மகன் இறந்துவிட்டானே என்ற சோகத்தில் சுந்தர் கத்தியால் தனது கையை அறுத்துகொண்டு அதே கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்ட அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

இது குறித்து குன்றத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட தந்தை, மகன் இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.