சினிமா துறை கேமராமேன் தூக்கிட்டு தற்கொலை...! என்ன காரணம்...?

சினிமா துறை கேமராமேன் தூக்கிட்டு தற்கொலை...! என்ன காரணம்...?

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு மேலச்செங்காடு பகுதியை சேர்ந்தவர் ராஜீவ் காந்தி(36). இவர் சினிமா துறையில் கேமராமேன் உதவியாளராக பணியாற்றிக் கொண்டு வடபழனியில் உள்ள பிள்ளையார் கோவில் தெருவில் இரண்டு மாதங்களாக நண்பர்களுடன் இணைந்து வாடகை வீட்டில் வசித்து வந்தார். 

ராஜீவ் காந்தி பல வருடங்களாக ஒரு பெண்ணை காதலித்து வந்த நிலையில், சமீபத்தில் கருத்து வேறுபாடு காரணமாக காதலில் தோல்வி ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் மன உளைச்சல் அடைந்த ராஜீவ் காந்தி, கடந்த 20 நாட்களாக வேலைக்கு செல்லாமல் குடிபோதைக்கு அடிமையாகி வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். 

இந்த நிலையில் நேற்று வீட்டில் ராஜீவ் காந்தியின் நண்பர்கள் அனைவரும் பணிக்கு சென்றுவிட்டு இரவு வீட்டிற்கு வந்த போது, கதவு பூட்டப்படாமல் இருந்ததுள்ளது. இதனால் சந்தேகமடைந்து உள்ளே சென்று பார்த்த போது ராஜீவ் காந்தி மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.  

பின்னர் இது குறித்து தகவலறிந்த வடபழனி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ராஜீவ் காந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

தொடர்ந்து வீட்டில் சோதனையிட்ட போது ராஜீவ் காந்தி இறப்பதற்கு முன், தற்கொலை கடிதம் எழுதி வைத்திருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். அதில், தனது இறப்புக்கு யாரும் காரணமில்லை எனவும் காதல் தோல்வியால் மன உளைச்சல் ஏற்பட்டு குடிபோதைக்கு அடிமையாகி தற்கொலை முடிவை எடுத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த கடிதத்தை கைப்பற்றிய போலீசார் தற்கொலை தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிக்க : குட்கா முறைகேடு தொடர்பான வழக்கு...! மீண்டும் நடந்த விசாரணை...!