அனுமதி இல்லாமல் பதுக்கி வைக்கப்பட்ட பட்டாசுகள்...! பறிமுதல் செய்த போலீசார்...!

அனுமதி இல்லாமல் பதுக்கி வைக்கப்பட்ட பட்டாசுகள்...! பறிமுதல் செய்த போலீசார்...!

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் பகுதிகளில் அனுமதி இல்லாமல், தீபாவளி பட்டாசு வெடிப்பொருட்கள் பதிக்க வைக்கப்படுவதாக தடுப்பு பிரிவு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த ரகசிய தகவலின் அடிப்படையில் விருத்தாச்சலம் காந்திநகர் பகுதியில் வசிக்கும் அரசு பள்ளி ஆசிரியர் அருள்ஜோதி என்பவர் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, சுமார் ரூ.50,000 மதிப்புள்ள பட்டாசுகள் இருப்பது கண்டறியப்பட்டது.

பின்னர் உடனடியாக விருத்தாச்சலம் காவல்துறையினர் விரைந்து வந்து, அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில் அனுமதி இல்லாமல் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளை பறிமுதல் செய்து, அவர் மீது வழக்கு பதிந்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.