ரூ.26 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்...

விமான நிலையத்தில் ரூ. 25.84 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

ரூ.26 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்...

திருச்சியிலிருந்து சிங்கப்பூர் வழியாக கோலாலம்பூர் செல்ல ஸ்கூட் விமானம் பயணிகளை ஏற்று செல்ல தயாராக இருந்தது. அந்த விமானத்தில் செல்லும் பயணிகளை திருச்சி விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது பயணி ஒருவர் தன்னுடைய பையில் 29 ஆயிரத்து 950 யூரோ கரன்சிகளை வைத்து இருந்துள்ளார். அதனை பறிமுதல் செய்து அதிகாரிகள் அந்த பயணியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பறிமுதல் செய்யப்பட்ட வெளிநாட்டு கரன்சிகளின் இந்திய ரூபாயின் மதிப்பு சுமார் 26 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க | 8 ஆயிரம் வாடகைக்கு வீடு - தடைசெய்யப்பட்ட 1100 கிலோ புகையிலை பறிமுதல்