மரக்கிடங்கில் திடீரென பரவிய தீயால் கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம்...

புதுச்சேரியில் நள்ளிரவில் மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள மரக்கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்துள்ளது.

மரக்கிடங்கில் திடீரென பரவிய தீயால் கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம்...

புதுச்சேரியை மேட்டுப்பாளையத்தில் பிப்டிக் சாலையில் குமரவேல் என்பவருக்கு சொந்தமான மரக்கிடங்கு உள்ளது இங்கு நள்ளிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால் மேட்டுப்பாளையம், கதிர்காமம், தட்டாஞ்சாவடி உள்ளிட்ட பகுதிகள் புகைமண்டலமாக காட்சியளித்தது.

இதனைத்தொடர்ந்து தகவலறிந்து தன்வந்திரி நகர், வில்லியனூர், திருபுவனை மற்றும் புதுச்சேரி தலைமை  தீயணைப்பு நிலையங்களில் இருந்து 5 க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் 6 மணி நேரத்திற்கு மேலாக போராடி  தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர், இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தீ விபத்துக்கான காரணம் குறித்து தீயணைப்புத்துறை அதிகாரிகள் மற்றும் மேட்டுப்பாளையம் காவல் நிலைய போலீசார் விசாரணை செய்து வருகின்றார்கள். இந்த தீவிபத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான மரப்பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | 34 ஆண்டுகளுக்கு பிறகு சட்டப்பேரவைக்குள் நுழையும் ஈவிகேஎஸ் இளங்கோவன்!