குடியிருப்பு பகுதியில் உலா வரும் சிறுத்தை: அச்சத்தில் மக்கள்...!

குடியிருப்பு பகுதியில் உலா வரும் சிறுத்தை: அச்சத்தில் மக்கள்...!

திருப்பூர் மாவட்டம் ஊதியூர் மலை அடிவாரத்தில் உலா வரும் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். 

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்துள்ள ஊதியூர் மாலை அடிவார பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் ஒரு கன்றுக்குட்டியை கடித்து கொன்ற பின் உறுதி செய்யப்பட்டது. பின்னர்  4 மாதங்களாக சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் போராடி வருகின்றனர்.தற்போது சிறுத்தையின் நடமாட்டம் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில்  வேகமாக பரவி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

காங்கேயம் அடுத்த தாராபுரம் சாலையில் உள்ளது ஊதியூர். இந்த மலையானது சுமார் 10 கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. மலையை சுற்றுயும் பல்வேறு கிராமங்கள் உள்ளது. இந்த கிராமங்களில் விவசாயம் மற்றும் கால்நடை தொழில்களே பிரதான தொழிலாக இருந்து வருகின்றது.  4 மாதத்திற்கு முன்பு ஊதியூர் வனப்பகுதிக்கு வந்த ஒரு சிறுத்தை பதுங்கி மலையடிவாரப் பகுதியில் உள்ள தோட்டங்களில் புகுந்து அங்கிருந்த ஆடு, மாடு, நாய்களை வேட்டையாடி வந்தது.

இதையடுத்து, காங்கேயம் வனத்துறையினர் ஊதியூர் மலை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக எச்சரிக்கை பதாகைகள் பல்வேறு இடங்களில் வைத்து சிறுத்தையை கண்காணித்து வந்தனர். மேலும் வனத்துறையினர் கண்காணிப்பு கேமராக்கள், கூண்டுகள், ட்ரோன்கள் கேமராக்கள் உள்ளிட்டவைகளை வைத்தும் தீவிரமாக தேடி வந்தனர். 

ஆனால் சிறுத்தை போக்கு காட்டும் விதமாக கூண்டுகளில் சிக்காமல் இதுவரை வனத்துறையினருக்கு போக்கு காட்டி வருகிறது. இந்தநிலையில் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் சிறுத்தையை பார்த்ததாக தகவல் தெரிவித்து வந்தனர். தகவல் தெரிவித்த இடங்களுக்கு சென்ற வனத்துறையினர் சிறுத்தையின் கால் தடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்து வந்தனர். இந்தநிலையில் கடந்த சில நாட்களாக ஊதியூர் மலை அடிவார பகுதியில் உள்ள விவசாய தோட்டத்தில் பட்டியில் அடைத்து வைத்திருந்த ஆட்டுக்குட்டிகள் மாயமாகி வந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த வனத்துறையினர் அப்பகுதிக்குச் சென்று கால்தடங்களை ஆய்வு செய்து சிறுத்தை வேட்டையாடியது உறுதிப்படுத்தினர். இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நள்ளிரவு 12 மணியளவில் ஊதியூர் மலை அடிவார பகுதியில் உள்ள விவசாயி கார்த்தி என்பவரது தோட்டத்தில் புகுந்த சிறுத்தை மெதுவாக நடந்து சென்று இரை தேடிய காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் சிறுத்தை பொதுமக்கள் தாக்கும் முன் நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.

இதையும் படிக்க     | தமிழகத்தில் முதன்முதலாக வணிகத்தை தொடங்கியுள்ள ' லூலூ ' நிறுவனம்..! புதிதாக திறக்கப்பட்ட 'லூலூ மால் '..! எங்கு தெரியுமா...?