சாய்பாபாவின் 97வது பிறந்தநாளுக்கு குவிந்த 5000க்கும் மேற்பட்ட பக்தர்கள்...

கொடைக்கானலில் சாய்பாபா அவர்களின் 97 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு கம்பளி மற்றும் உணவுகள் வழங்கப்பட்டது.

சாய்பாபாவின் 97வது பிறந்தநாளுக்கு குவிந்த 5000க்கும் மேற்பட்ட பக்தர்கள்...

திண்டுக்கல் | சாய்பாபா அவர்களின் 97வது பிறந்தநாள் இன்று பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து கொடைக்கானலில் சாய்பாபா இல்லத்தில் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

காலையில் இருந்து பல்வேறு சிறப்பு பூஜைகள் மற்றும் யாகங்களும் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து கொடைக்கானலில் உள்ள சுமார் 5000 க்கும் மேற்பட்ட ஏழை எளிய பொதுமக்களுக்கு கொடைக்கானல் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் தலைமைவகித்து துவங்கி வைத்தார்.

கம்பளி மற்றும் உணவுகள் வழங்கப்பட்டது. மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க | சாய் பாபா கோவிலில் துர்கா ஸ்டாலின்...