ரவுடியின் தலையை துண்டித்து கொலை செய்த மர்ம நபர்கள்...! வலைவீசி கண்டுபிடித்த போலீசார்...!

ரவுடியின் தலையை துண்டித்து கொலை செய்த மர்ம நபர்கள்...! வலைவீசி கண்டுபிடித்த போலீசார்...!

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை சமத்துவபுரம் அருகே அத்தாணி வயல் கண்மாய் கரை பகுதியை சேர்ந்தவர் பாண்டி என்ற முத்துப்பாண்டி(38). இவர் மீது பல கொலை, கொள்ளை, திருட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதற்காக அடிக்கடி சிறைக்கு சென்று, பின்னர் ஜாமீனில் வந்து மீண்டும் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து அவர் சில மாதங்களுக்கு முன்பு சிறையில் இருந்து வெளியே வந்திருந்தார். 

இந்தநிலையில் திருவாடானையில் இருந்து செங்கமடை கிராமத்திற்கு செல்லும் வயல்காட்டு பாதையில் நேற்று முன்தினம் இரவு முத்துப்பாண்டியின் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கொடூரமாக கொல்லப்பட்டு கிடந்தாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் வேளாங்கண்ணி மாதா குளம் அருகே ஒரு தனியார் விடுதியில் குற்றவாளி தங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் நேற்று நள்ளிரவு ராமநாதபுரம் போலீசார் குற்றவாளிகள் 2 பேரை கைது செய்து அழைத்துச் சென்றனர்.