நீட் பயிற்சி மாணவி...! ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை...!! 

நீட் பயிற்சி மாணவி...! ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை...!! 

நீட் தேர்வுக்கு பயிலும் மாணவி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வடலூர் பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
கடலூர் மாவட்டம் வடலூர் கோவிந்தசாமி நகர் பகுதியில் வசிப்பவர் உத்திராபதி இவரது மகள் 17 வயது நிஷா.இவர் நெய்வேலி, இந்திரா நகர், ஆர்ச் கேட் பகுதியில் உள்ள ஆகாஷ் கோச்சிங் சென்டரில் நீட் தேர்வுக்கான பயிற்சியில் பயின்று வருகிறார்.

இந்நிலையில் பெங்களூரில் இருந்து காரைக்காலுக்கு செல்லும் பாசஞ்சர் ரயில் நேற்று மாலை 5.30 மணி அளவில் வடலூர் வழியாக கடலூரை நோக்கி சென்ற பொழுது ரயில்வே தண்டவாளத்தில் நின்ற நிஷா திடீரென ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்த வடலூர் போலீஸ்சார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நீட் தேர்வுக்கு பயிலும் மாணவி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வடலூர் பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.