முட்டைகளால் நிரம்பிய நாகர்கோவில் சாலை....!!

முட்டைகளால் நிரம்பிய நாகர்கோவில் சாலை....!!

முட்டை ஏற்றி வந்த மினி டெம்போ டயர் வெடித்து கவிழ்ந்து விபத்து உள்ளானது இதனால் 30 ஆயிரம் முட்டைகள் உடைந்து சாலையில் தண்ணீர் போல் ஓடியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

நாமக்கல்லில் இருந்து 30 ஆயிரம் முட்டைகளை ஏற்றிக் கொண்டு நாகர்கோயில் நோக்கி டெம்போ சென்று கொண்டிருந்தது.  நெல்லை மாவட்டம் பனங்குடி அருகே தெற்கு வெள்ளியூர் நான்கு வழி சாலையில் இருந்த பல்கருகே வரும்போது மினி டெம்போவின் பின்னால் உள்ள டயர் வெடித்தது.

இதனால் நிலைகுலைந்த மினி டெம்போ சாலையிலேயே ஒரு பக்கமாக சய்ந்தது.  இதனால் டெம்போவில் இருந்த 30 ஆயிரம் முட்டைகள் உடைந்து அதிலிருந்து வெள்ளை கருவும் மஞ்சள் கருவும் ஒன்றாக சேர்ந்து மஞ்சள் கலரில் சாலையில் தண்ணீர் போல் ஓடியது.  இந்த விபத்து காரணமாக வாகனங்கள் அனைத்தும் மீன் சாலையில் இருந்து சர்வீஸ் ரோடு வழியாக வாகனங்கள் திருப்பி விடப்பட்டன.  முட்டைகள் சாலையில் வழிந்து ஓடியதால் அதனை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்றது.  மேலும் விபத்து குறித்து பணகுடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிக்க:   வடமாடு மஞ்சுவிரட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்...!!