800 லிட்டர் கள்ளச்சாராய ஊறலும், 20 ல்கிட்டர் கள்ளச்சாராயமும் பறிமுதல் செய்த அதிகாரிகள்...

கருமந்துறை மலைப்பகுதியில் 800 லிட்டர் கள்ளச்சாராய ஊறலும் 20 லிட்டர் கள்ளச்சாராயமும் பறிமுதல் செய்யப்பட்டு தனிப்படை போலீசாரால் அழிக்கப்பட்டது.

800 லிட்டர் கள்ளச்சாராய ஊறலும், 20 ல்கிட்டர் கள்ளச்சாராயமும் பறிமுதல் செய்த அதிகாரிகள்...

சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவகுமாரின் அறிவுறுத்தலின்படி தனிப்படை அமைக்கப்பட்டு மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் கள்ளச்சாராயம் தடுப்பு சோதனை தீவிர படுத்தப்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களுக்கு மேலாக சேலம் மாவட்டம் கருமந்துறை மலைப்பகுதிகளில் உள்ள மலை கிராமங்களில் கள்ளச்சாராயம் தடுப்பு சோதனை அதிகப்படுத்தப்பட்டுள்ளது .

இந்த நிலையில் இன்று கருமந்துறை முடவன் கோயில் குன்னூர் ஓடை பகுதியில் சேத்தூரைச் சேர்ந்த ராமராஜ் என்பவர் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

மேலும் படிக்க | பல லட்சம் மதிப்புள்ள செம்மரக் கட்டைகள் பதுக்கல்...! பறிமுதல் செய்த போலீசார்...!

இதனையடுத்து அந்த பகுதிக்குச் சென்ற தனிப்படை போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டதில் ஓடை பகுதியில் 800 லிட்டர் கள்ளச்சாராயம் ஊறல் போடப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டு அவற்றை எடுத்து அழித்தனர். அதேபோல 20 லிட்டர் கள்ளச்சாராயமும் பறிமுதல் செய்து அழித்தனர். இது தொடர்பாக சேத்தூரைச் சேர்ந்த ராமராஜ் கைது செய்யப்பட்டு ஆத்தூர் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் கருமந்துறை வனப்பகுதிகளில்  கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க | மாமிசத்திற்காக காட்டுப்பன்றியைக் கொன்ற வாலிபர் கைது...