பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான ஆம்னி பேருந்து...!

பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான ஆம்னி பேருந்து...!

சென்னையில் இருந்து பெங்களூர் நோக்கி இன்று அதிகாலை தனியார் ஆம்னி பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கம் அருகே சென்று கொண்டிருந்தபோது வேகமாக சென்ற லாரி, ஆம்னி பேருந்தை இடிப்பது போல் வந்ததால் கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி பேருந்து சாலை விரிவாக்க பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்தது. இதில் பேருந்தில் இருந்த பயணிகள் அலறி அடித்தபடி வெளியேற முயன்றனர். பேருந்தின் அவசர கால வழி திறக்காததால்  முன் பக்க கண்ணாடியை உடைத்து அந்த வழியாக பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

இதையடுத்து பேருந்தில் பயணம் செய்த சில பயணிகளுக்கு  காயங்கள் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் அங்கிருந்து மாற்று வாகனத்தில் பெங்களூர் அனுப்பி வைக்கப்பட்டடனர். பூந்தமல்லி - பெங்களூர் நெடுஞ்சாலையில் சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருவதாலும் இரவு நேரங்களில் உரிய பாதுகாப்பு வசதிகள் ஏதும் செய்யாமல் பணிகள் நடைபெறுவது தான் இது போன்ற விபத்துக்கு காரணம் என பயணிகள் குற்றம் சாட்டி உள்ளனர். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க : இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட 7 மீனவர்கள்.. தொடர் அட்டூழியத்தால் மீனவர்கள் பாதிப்பு..!