பல மணி நேரம் காத்திருந்தும் பேருந்து வராததால் பொதுமக்கள் அவதி...

சொந்த ஊருக்கு செல்ல கரூர் பேருந்து நிலையத்தில் குவிந்த பயணிகள், பல மணி நேரம் காத்திருந்த பின்னும் பேருந்து வராததால், கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

பல மணி நேரம் காத்திருந்தும் பேருந்து வராததால் பொதுமக்கள் அவதி...

கரூர் | பொங்கல் பண்டிகை நாளை போகியுடன் தொடங்க உள்ளதால் தமிழர்களின் திருவிழாவான பொங்கல் பண்டிகை நாளை முதல் கோலாகலமாக கொண்டாட உள்ள நிலையில் மக்கள் சொந்த ஊருக்கு செல்ல துவங்கி உள்ளனர்.

தொழில் நகரமான கரூர் மாவட்டத்திற்கு மற்றும் மாவட்டங்களில் இருந்து வேலைக்காக வந்திருந்த மக்கள் பொங்கல் பண்டிகைக்காக தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல கரூர் பேருந்து நிலையம் வந்த வண்ணம் உள்ளனர்.

கரூர் மண்டலத்துக்குட்பட்ட கரூர், அரவக்குறிச்சி, குளித்தலை, முசிறி பணிமனைகளில் இருந்து 140 -க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

மேலும் படிக்க | மார்கழி இறுதி நாளில் விளக்கு பூஜை... ஏராளமான பெண்கள் கூட்டம்...

பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள், டெக்ஸ்டைல், கொசுவலை, பேருந்து கூண்டு கட்டும் நிறுவனங்களில் பணியாற்றும் பல்வேறு தொழிலாளர்களுக்கு நாளை முதல் விடுமுறை என்பதால் தங்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக அதிகளவில் பேருந்து நிலையத்தில் கால் எடுக்க காத்திருக்கும் நிலை நிலவி வருகிறது. மேலும்,

வெளி மாவட்டங்களான திருச்சி, திண்டுக்கல், சேலம், மதுரை,கோவை, ஈ ரோடு உள்ளிட்ட ஊர்களிலிருந்து வரும் பேருந்துகளும் இருக்கைகள் காலி இல்லாமல் வருவதால் கரூரிலிருந்து பயணிகள் ஏறிச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பயணிகள் நீண்ட காத்திருப்பிற்கு பிறகு பேருந்தில் ஏறிச் செல்கின்றனர். இதுபோன்ற விழா காலங்களில் முறையான பேருந்து வசதிகள் ஏற்படுத்தித் தர வேண்டும் எனவும் தற்போது போதிய பேருந்து வசதி இல்லாததால் மக்கள் பேருந்துகளில் நின்ற வண்ணம் செல்வது வேதனை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர். பாதுகாப்பு பணிக்காக போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் படிக்க | பொங்கலால் சூடு பிடித்த கரும்பு மற்றும் மஞ்சள் விற்பனை...