ரூபாய் 16 கோடி மதிப்பீட்டில் சாலை பணிகள்....!!

ரூபாய் 16 கோடி மதிப்பீட்டில் சாலை பணிகள்....!!

ரூபாய் 16 கோடி மதிப்பீட்டில் நான்கு வழி சாலையாக அகலப்படுத்தும் பணியை அமைச்சர் செஞ்சி மஸ்தான் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் நெடுஞ்சாலைத்துறை சார்பில் முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் வெள்ளிமேடு பேட்டை முதல் பாண்டி சாலை வழியாக  மயிலம் செல்லும் இரு வழிச்சாலையை ரூபாய் 16 கோடி மதிப்பீட்டில் நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணிக்கு பூமி பூஜை விழா நடைபெற்றது.  நிகழ்ச்சியில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் துறை சார்ந்த அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிக்க:   கடந்த 50 ஆண்டு காலமாக என் மீது நம்பிக்கை வைத்து...!!