நவதானிய கடையில் ரூ.1.94 லட்சம் கொள்ளை...

மதுரையில் நவதானிய கடையில் 1 லட்சத்து 94 ஆயிரத்தை மா்ம நபா்கள் கொள்ளையடித்து சென்ற சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

நவதானிய கடையில் ரூ.1.94 லட்சம் கொள்ளை...

மதுரை கீழ மாசி வீதி பகுதியில் எஸ்.எஸ். டிரேடர் என்ற நவதானிய விற்பனை கடையை மதுரை வில்லாபுரம் பகுதியை சேர்ந்த காமாட்சி பாண்டியன் என்பவர் நடத்தி வந்தார்.

இவர் வழக்கம் போல் தனது கடையை  இரவு அடைத்து விட்டு  மறுநாள் காலை திறந்து பார்த்தபோது கடையில் வைக்கப்பட்டிருந்த 1.94 லட்சம் ரூபாய் திருடு போனது தெரிய வந்தது.

இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் விளக்குத்தூண் போலீசார் வழக்கு பதிந்து விசாரனை செய்து குற்றவாளியை தேடி வருகின்றனர்.

மேலும் படிக்க | ஒரே நாளில் 9 கொலைகள் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது குற்றம் சாட்டும் இரட்டை இலையினர்.......

கீழ நா பாளையம் தெரு என்பது மிக மிக போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதியாகவும் அதேசமயம் பல்வேறு தொழில்கள் நடக்கக்கூடிய பகுதி யாகவும் இருந்து வருகிறது.

இந்த இடத்தில் நள்ளிரவு யாரோ ஒரு குற்றவாளி எந்த விதத்திலும் கடையின் தாப்பாலை சேதப்படுத்தாமல் சாவியை வைத்தே திறந்து கொள்ளையடித்த சம்பவம் மிகப் பெரிய அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே கடையை நோட்டமிட்டு வந்த நபரா இவருக்கு கதவின் சாவி எப்படி கிடைத்தது அல்லது கடையில் வேலை பார்த்த ஊழியர் யாரேனும் இந்த வேலையில் ஈடுபட்டுள்ளாரா போன்ற பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருவதை குறிப்பிடத்தக்கது

மேலும் படிக்க | சென்னை மயிலாப்பூரை சேர்ந்த ஆடிட்டர் ஸ்ரீகாந்த் மற்றும் அவரது மனைவி கொலை வழக்கு விசாரணை - பிப் -17 தள்ளிவைப்பு