ஆற்றங்கரை உடைந்து 20 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் மூழ்கின...

மணிகர்ணிகா ஆற்றங்கரையின் 3 இடங்களில் திடீர் உடைப்பு ஏற்பட்டதால், 20 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கின. பயிர்களுக்கு இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆற்றங்கரை உடைந்து 20 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் மூழ்கின...

மயிலாடுதுறை : சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை 12 மணி நேரத்தில் சுமார் 22 சென்டிமீட்டர் மழை பதிவானது. திடீர் கனமழையால் சீர்காழி கொள்ளிடம் பூம்புகார் சுற்றுவட்டார பகுதி விளைநிலங்கள் மற்றும் குடியிருப்புகள் என பல்வேறு பகுதிகளிலும் மழை நீர் சூழ்ந்து பாதிப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்க | எதிர்கட்சின்னு தானே இப்படி பன்றீங்க? வார்டு உறுப்பினர் வருத்தம்...

இந்நிலையில் குறவலூர் அருகே பிரதான வடிகால் ஆறான மணிக்கரணை ஆற்றில் அடுத்தடுத்து மூன்று இடங்களில் உடைப்பு ஏற்பட்டு மழை நீர் முழுவதுமாக விளைநிலங்களுக்குள் புகுந்து சம்பா பயிர்கள் முற்றிலும் மூழ்கியது. இதே போல் சீர்காழியை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளிலும் வடிகால் ஆறு மற்றும் வாய்க்கால்கள் மூலம் கரைகளில் உடைப்பு ஏற்பட்டும் கரைகளை தான்டி வெளியே வடிந்தும் விளை நிலங்களுக்குள் மழை நீர் முழுவதுமாக உட்புகந்தது.

மேலும் படிக்க | 7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு...

இதன் காரணமாக திருவாலி, மணல்மேடு, நிம்மேலி, புதுத்துரை, குரவலூர், நெப்பத்தூர், திருநகரி, மங்கைமடம் சுற்றுவட்டார பகுதி கிராமங்களில் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பிலான சம்பா பயிர்கள் முற்றிலும் மழை நீரில் மூழ்கியுள்ளதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். வடிகால் ஆறு மற்றும் வாய்க்கால்கள் முழுமையாக தூர்வாரப்படாததே விவசாயம் பாதிக்கப்பட்டதற்கு காரணம் என இப்பகுதி விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

மேலும் படிக்க | குளம் போல் மாறிய குடியிருப்பு பகுதிகள்...

வாய்க்கால்களை பொதுப்பணித்துறையினர் தூர் வாராமல் 100 நாள் வேலை திட்டத்தில் பெயரளவில் மட்டுமே ஒவ்வொரு ஆண்டும் தூர்வாரப்படுவதாகவும் இதன் காரணமாக வாய்க்கால்கள் ஆழம் குறைந்து புதர்கள் மண்டி இருப்பதால் தண்ணீர் வடியாமல் அருகில் உள்ள விளைநிலங்களுக்குள் புகுந்துள்ளது எனவும் விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

எனவே உடனடியாக அனைத்து வடிகால் வாய்க்கால்கள் மற்றும் ஆறுகளை தூர்வாரி சீரமைக்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் உரிய கணக்கெடுப்பு நடத்தி இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க | வெள்ளத்தில் சூழ்ந்த நகரங்கள்... ஆரஞ்சு அலர்ட் உண்மையா?