பார்சல் சர்வீஸ் அலுவலகத்தை இழுத்து பூட்டியதால் பரபரப்பு...!!

பார்சல் சர்வீஸ் அலுவலகத்தை இழுத்து பூட்டியதால் பரபரப்பு...!!

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில்  செங்குந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர் ஜியோ கம்பெனியில் கன்ஸ்ட்ரக்சனாக பணியாற்றி வருகிறார்.  இவர் கடந்த மாதம் 3ம் தேதி ஒன்றரை லட்சம் மதிப்பிலான காப்பர் ஒயர்களை சென்னையிலிருந்து அரக்கோணத்திற்கு ஜெயங்கொண்டத்தில் உள்ள மேட்டூர் பார்சல் சர்வீஸ் மூலம் அனுப்பியுள்ளார்.  ஆனால் பார்சல் அனுப்பி ஒரு மாதம் ஆகியும் இதுவரையிலும் காப்பர் ஒயரானது அரக்கோணத்திற்கு சென்றடையவில்லை எனக் கூறப்படுகிறது. 

இது குறித்து பிரபாகரன் பார்சல் சர்வீஸ் அலுவலகத்தில் கேட்டபோது உரிய பதில் அளிக்காமல் அலட்சியமாக பதில் கூறியுள்ளனர்.  இதனால் ஆத்திரமடைந்த பிரபாகரன் உள்ளிட்ட சிலர் பார்சல் சர்வீஸ் அலுவலகத்தை இழுத்துப் பூட்டி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  சம்பவ இடத்திற்கு வந்த ஜெயங்கொண்டம் போலீசார் இரு தரப்பினைருக்குமிடையே பேச்சு வார்த்தை நடத்தி விரைவில் பார்சல் கிடைக்க  நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதையும் படிக்க:  மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவி உயிரிழப்பு...!!!