கைகலப்பில் முடிந்த வாக்குவாதம்.. லீவு கேட்டதுக்கா  இந்த அக்கப்போரு!!!

கைகலப்பில் முடிந்த வாக்குவாதம்.. லீவு கேட்டதுக்கா  இந்த அக்கப்போரு!!!

நாகர்கோவில் ஆயுதப்படையில் பணியாற்றி வரும் பெண் சிறப்பு பயிற்சி காவல்துறையினர்  இடையே மோதல். 


காவல்துறையினர்  இடையே மோதல்:

கன்னியாகுமரி மாவட்டம்: நாகர்கோவில் நேசமணி நகர் காவல் நிலைய எல்லை பகுதியில் ஆயுதப்படை நிலையம் உள்ளது. அங்கு பெண் போலீஸ் ட்ரைனிங் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வள்ளி செல்வி பணியாற்றி வருகிறார். அப்போது அங்கு பணியாற்றும் பெண் போலீஸ் ஏட்டு சொர்ணவாணியின் குழந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து நேற்று இரவு அந்த பெண் போலீஸ் ஏட்டு, பயிற்சி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரிடம் விடுமுறை கேட்டதாக தெரிகிறது. ஆனால் அதற்கு சிறப்பு சப்-இன்ஸ் பெக்டர் மறுத்து விட்டார்.

இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். இந்த தாக்குதலில் சிறப்பு பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர், பெண் போலீஸ் ஏட்டு ஆகியோருக்கு காயம் ஏற்பட்டு, ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு பெற்று வருகிறார்கள்.

இந்த சம்பவத்தால் மாவட்ட ஆயுதப்படை பரபரப்பு ஏற்பட்டது.