படப்பிடிப்பால் பாலத்தை மறித்த படக்குழு...! ஆத்திரமடைந்த வாகன ஓட்டிகள்...!

படப்பிடிப்பால் பாலத்தை மறித்த படக்குழு...! ஆத்திரமடைந்த வாகன ஓட்டிகள்...!

வடசென்னை திருவொற்றியூரிலிருந்து மணலி செல்லக்கூடிய இணைப்பு பாலம் ஒன்றின் கட்டுப்பாட்டு பணிகள்  முழுமையடையாத நிலையில் உள்ளது. இருப்பினும் பொதுமக்கள் பலரும் இந்த பாலத்தை உபயோகித்து சென்று வருகின்றனர். இந்த பாலத்தை தவிர்த்தால் மக்கள் 8 கிலோமீட்டர் வரை சுற்றி செல்லவேண்டிய நிலை உள்ளது. 

இந்நிலையில் இன்று இரவு மேம்பாலத்தில் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ்  படத்தின் படபிடிப்பு நடைபெறுவதாகவும், அதனால் இந்த பாலத்தின் வழியே செல்ல அனுமதியில்லை எனவும் அங்கிருந்த படபிடிப்பு குழுவினர் இரும்பு தடுப்புகளை கொண்டு பாலத்தின் வழியை மறித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த வாகன ஓட்டிகள் அவர்களோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது சிரமத்திற்குள்ளான வாகன ஓட்டிகள், தாங்கள் 45 நிமிடத்திற்கும் மேலாக இங்கு காத்திருப்பதாகவும் ஆனால் பாலத்தை மறித்து படபிடிப்பு நடப்பதால் தாங்கள் 8 கிலோமீட்டர் அளவில் சுற்றி செல்வ வேண்டி இருக்கும் எனவும் குற்றம்சாட்டினர். மேலும் இந்த சம்பவத்தின் போது, போலீசார் ஒருவர் கூட பொதுமக்களிடம் பேச்சவார்த்தை நடத்தவில்லை என்பது தான் பலரின் கருத்தாக உள்ளது.