குடிநீர் தொட்டியில் கழிவு கலக்கப்பட்ட விவகாரம் - விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் குடிநீர் தொட்டியில் கழிவு கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கூடிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

குடிநீர் தொட்டியில் கழிவு கலக்கப்பட்ட  விவகாரம்   - விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை மாவட்டம்  கிராமத்தில் பட்டியிலன மக்கள் குடியிருக்கும் மேல்நிலையில் தொட்டியில் மலம் கலந்த சம்பவம் பெரும் அதிர்வலை உருவாக்கியுள்ளது. இச்செயல தொடர்பாக இதுவரை யாரையும் கைது செய்யவில்லை. 

மேலும் படிக்க | புத்தாண்டுக்கு மாமூல் கேட்ட ரவுடிக்கு தலையில் வெட்டு

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அண்ணா சிலை அருகே கிழக்கு மாவட்ட விசிக கட்சி சார்பில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர் நா. தமிழ்முத்து தலைமையில்  புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் கிராமத்தில் நீர் தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட  விவகாரம் தொடர்பாக, தொடர்புடைய நபர்களை   கைது செய்ய வலியுறுத்தி ஆர்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக தமிழ் புலிகள் கட்சி ஆதித்தமிழர் பேரவை திராவிட கழகத்தினர். முஸ்லிம் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.