ஹோட்டல் சாப்பாட்டில் கிடந்த பல்லி...! அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்கள்...!

ஹோட்டல் சாப்பாட்டில் கிடந்த பல்லி...! அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்கள்...!

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை அரண்மனைவாசல் பகுதியில் செயல்படும் தனியார் உணவகத்தில் தஞ்சாவூரில் இருந்து அலுவல் சுற்றுபயனமாக  வந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் பலர் உணவு உண்பதற்காக ஹேட்டலுக்கு சென்றுள்ளனர். அவர்கள் ஆர்டர் செய்த உணவில் பல்லி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து அவர்கள் உணவு ஊழியர்களிடம் முறையிட்ட போது, அவர்கள் அதனை மறைக்க முயற்சித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பலரும் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

பின்னர் இந்த சம்பவம் குறித்து போலீசார் மற்றும் உணவுத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அந்த பகுதிக்கு விரைந்த அதிகாரிகள் ஹோட்டலில் சோதனை மேற்கொண்டு, வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களையும் சமாதானம் செய்து, விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்ப்படுத்தியது.