ஒன்பதாவது வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆசிரியர்...! பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்கள்...!

ஒன்பதாவது வகுப்பு  மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆசிரியர்...! பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்கள்...!

தேனி மாவட்டம் கம்பம் ரேஞ்சர் ஆபீஸ் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு வகுப்பில் பாடம் எடுக்கும் ஆசிரியர் நாள்தோறும் வகுப்பறையில் இருக்கும் மாணவிகளிடம் பாலியல் தொல்லை தரும் வகையில் தொட்டு  பேசி வகுப்புகளை நடத்தி வருவதாக சங்கரலிங்கம் தெருவைச் சேர்ந்த மாணவி ஒருவர் அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார். 

அந்த தகவலை அறிந்த பெற்றோர்கள், அதிர்ச்சியடைந்து மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து இருப்பது தொடர்ந்து நடந்து வருவதாக புகார் கூறி வந்த நிலையில் பள்ளியில் உறவினர்களுடன் சென்று முற்றுகையிட்டு ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் பள்ளிக்கு சென்று வகுப்பறை மாணவி மற்றும் ஆசிரியர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் கம்பம் நகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.