விடிய விடிய சோதனை செய்த போக்குவரத்து காவல்துறையினர்...

புதிய மோட்டார் வாகன திருத்துச் சட்டம் அமலுக்கு வந்ததையொட்டி இரவு முழுக்க சென்னையில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

விடிய விடிய சோதனை செய்த போக்குவரத்து காவல்துறையினர்...

கடந்த 2019 ஆம் ஆண்டு மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வந்தது அதன் அடிப்படையில் போக்குவரத்து விதிமுறை மீறிய வாகனங்களுக்கு அபராத தொகை மாற்றி அமைக்கப்பட்டது.  இதனையடுத்து புதிய அபராத தொகையை வசூலிக்க தமிழக அரசு முடிவு செய்து 19.10.2022 அன்று அரசாணை வெளியிட்டது.

சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் புதிய அபராத தொகை வசூலிக்கப்படும் எனவும் அதில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் போக்குவரத்து விதிமீறல்களுக்கான அதிகரிக்கப்பட்ட அபராத தொகையினை சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை கணினி சேவையகத்தில் மேம்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | சோழர் காலத்து உலோக சிலை கண்டெடுப்பு...! சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை...!

இதனால் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்து விதிகளை மீறும் குற்றத்திற்காக மோட்டார் வாகன சட்டத்தின் புதிய அபராத தொகை இன்று முதல் அமல்படுத்தப்படும் என்றும் புதிய விதிமுறைகளின் படி அபராதம் வசூலிக்கப்படும் எனவும் சென்னை பெருநகர காவல் துறை அறிவித்திருந்த நிலையில் காலை முதலே சென்னையில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து காவல்துறையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இரவு முழுவதும் வாகனத்தை தணிக்கை மேற்கொண்டு இதில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டும் நபர்கள் மற்றும் உடன் செல்லும் நபர்கள் மீதும் வழக்கு பதியப்பட்டும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஹெல்மெட் அணியாமல் செல்லும் ஒரு சில நபர்களிடமும் முதல் நாள் என்பதால் போலீசார் எச்சரித்து அனுப்பி வருகின்றனர்.

மேலும் படிக்க | புதுத் துணி வாங்கித் தராததால் சிறுவன் தூக்கிட்டு தற்கொலை...

இருந்தபோதிலும் குடித்துவிட்டு வரும் நபர்கள் போக்குவரத்து போலீசாரிடம் பத்தாயிரம் அபராதத்தை செலுத்த வேண்டும் என வலியுறுத்துவதால்   பிரீத்திங் அனலைசர் ஊதாமலும் வாக்குவாதம் செய்கின்றனர்.

குடித்துவிட்டு அபராதம் செலுத்தும் நபர்களிடம் அவரை புதிய கட்டணத்தை அபராதமாக விதித்து இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தும் கார்களில் குடித்துவிட்டு வரும் நபர்களை மாற்று வண்டியில் அனுப்பியும் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க | “மஞ்சப்பைய எடுத்துச் செல்ல வெட்கப்பட வேணாம்!”... சிறுவர்களின் வைரல் வீடியோ...