பட்டாசு வெடித்ததில் ஏற்பட்ட தகராறில் மூன்று பேர் கைது...

புளியந்தோப்பில் தீபாவளிக்கு பட்டாசு வெடித்ததில் ஏற்பட்ட தகராறில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பட்டாசு வெடித்ததில் ஏற்பட்ட தகராறில் மூன்று பேர் கைது...

சென்னை : சேத்துப்பட்டு எம் . எஸ் . முத்து நகர் 3வது தெருவை சேர்ந்தவர் ஆல்வின் என்கின்ற அலெக்ஸ் 26 இவர் கடந்த 24ஆம் தேதி தனது நண்பர் ஜெய்கணேஷ் என்பவரை பார்க்க புளியந்தோப்பு கே எம் கார்டன் பகுதிக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு பட்டாசு வெடித்து கொண்டு இருந்த புளியந்தோப்பு கார்ப்பரேஷன் லைன் பகுதியைச் சேர்ந்த அருண்மொழி 29 என்பவர் வெடித்த பட்டாசு அலெக்ஸ் மீது பட்டது.

மேலும் படிக்க | இலங்கை மீனவர்களிடம் மாவட்ட ஆட்சியர் விசாரணை!

அப்போது இருவருக்கும் இடையே வா வாய் தகராறு ஏற்பட்டு அருண்மொழி மற்றும் அவரது நண்பர்களான புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த சரவணன் 27, ஜீவா 23 ஆகிய மூன்று பேரும் சேர்ந்து அலெக்சை கீழே தள்ளி சரமாரியாக அடித்துள்ளனர்.

இதில் அவருக்கு வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அலெக்ஸ் கொடுத்த புகாரின் பேரில் புளியந்தோப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து அருண்மொழி சரவணன், ஜீவா ஆகிய மூன்று பேரையும் நேற்று கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க | முதலமைச்சரை விமர்சித்த அதிமுக மூத்த தலைவர் ராஜன் செல்லப்பா!!!