மின்சாரம் பாய்ந்து வடமாநிலத் தொழிலாளர்கள் இருவர் உயிரிழப்பு...!!

மின்சாரம் பாய்ந்து வடமாநிலத் தொழிலாளர்கள் இருவர் உயிரிழப்பு...!!

திருப்பூர் அருகே முதலிபாளையம் பகுதியில் வீட்டில் தங்கி இருந்த இரண்டு வட மாநில தொழிலாளர்கள் எதிர்பாராத விதமாக அடுத்தடுத்து மின்சாரம் பாய்ந்து உயிர் இழந்துள்ளனர்.

ஈரதுணியை உலர்த்த கம்பியின் மீது  போட்ட போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்த நிலையில் அவரை காப்பாற்ற மற்றொருவர் முயன்ற போது அவரும் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு.

திருப்பூர் மாவட்டம் முதலிபாளையம் கிராமம் உட்பட்ட  சிட்கோ  செந்தில் நகர்  பகுதியில்   உத்திரப்பிரதேசம் மாநிலத்தைச்  சேர்த்த கமலேஷ் (24) சச்சின் ராம்.(22) ஆகிய இருவரும் நண்பர்கள். அங்குள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்த  இருவரும் அருகில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளனர்.
இதில் கமலேஷ் என்பவர் தனது  ஈரதுணியை காய வைப்பதற்காக அருகிலுள்ள கம்பியின் மீது  துணியை போட்டுள்ளர். அதில் மின்சாரம் இருந்ததால்  எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது ,அதில்  அவர் தூக்கி வீசப்பட்டார், இதை பார்த்த நண்பர்  சச்சின் ராம் என்பவர்  மின்சாரம் தாக்கிய நண்பரை  காப்பாற்ற முயன்ற போது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்ததில்  சம்பவ இடத்திலேயே இருவரும் தூக்கி வீசப்பட்டு  உயிரிழந்தனர். இருவரது அலறல் சத்தம் கேட்டதை தொடர்ந்து அருகில் உள்ளவர்கள் சென்று பார்த்த போது இருவரும் சடலமாக கிடந்துள்ளனர்.

இதுகுறித்து ஊத்துக்குளி போலீசார் தகவல் தெரிவித்ததை அடுத்து போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர், மின்சாரம் தாக்கி வடமாநில தொழிலாளர்கள் இருவர் மின்சாரம் தாக்கி உயிர் இழந்த நிகழ்வு அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.