வெவ்வேறு விபத்தில் இருவா் உயிாிழப்பு...

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வெவ்வேறு விபத்துகளில் இரு இளைஞா்கள் உயிாிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெவ்வேறு விபத்தில் இருவா் உயிாிழப்பு...

விருதாச்சலம் பகுதியைத் சேர்ந்த தீபக்ராஜ் (25) என்பவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பகுதியில் உறவினர் வீட்டில் வசித்து வருகிறார்.

இவர் காலையில் சந்தப்பேட்டையில் இருந்து உணவு வாங்கிக் கொண்டு திருக்கோவிலூர்க்கு  வருகிற போது சந்தப்பேட்டை சாலையில் எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதியதில் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

மேலும் படிக்க | அப்துல் கலாம் பெயரில் திட்டம்.... அவரை போலவே சாதனை பெற வேண்டும்!!!

அப்போது அவர் மீது தனியார் பள்ளி பேருந்து ஏறி இறங்கியதில் தீபக்ராஜ் என்பவர் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி உயிரிழந்தார். திருக்கோவிலூர் போலீசார் சடலத்தை மீட்டு அவரது உடலை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு உடற்குழாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

இதே போல் திருக்கோவிலூர் அருகே காட்டுபையூர் பகுதியில் உயர் ரக பல்சர் வாகனத்தில் வீரன் (20 )என்ற வாலிபர்  டிராக்டர் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த இரு வேறு விபத்து குறித்து திருக்கோவிலூர் போலீசார் வழக்கு பதிவு விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க | பள்ளி வாகனத்தில் மோதிய இருசக்கர வாகனம்...