பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்தில் பெண் படுகாயம்...

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு தொழிற் சாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்தில் பெண் படுகாயம்...

சிவகாசி அருகே ஈஞ்சார் கிராமத்தில் செல்வராஜன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலை இயங்கி வருகிறது. நூற்றுக்கணக்கான ஆண்- பெண் தொழிலாளர்கள் பணி புரிந்து வருகிறார்.

இந்த தொழிற்சாலையில், பட்டாசு தயாரிக்க தேவையான மூலப்பொருட்களை அலசும் சல்லடைகளை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈஞ்சாரைச் சேர்ந்த வேலம்மாள் (வயது 54 )என்ற தொழிலாளி ஈடுபட்டிருந்தார்.

மேலும் படிக்க | மின்கம்பி உரசியதில் தீயில் கருகிய 2 ஏக்கர் கரும்பு தோட்டம்...

அப்போது சல்லடையில் ஒட்டி இருந்த மூலப் பொருளில் உராய்வு ஏற்பட்டு திடீரென தீ விபத்து ஏற்பட்டது விபத்தில் லேசான காயம் அடைந்த பெண் தொழிலாளி வேலம்மாள் சிகிச்சைக்காக சிவகாசி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து நடந்த தொழிற்சாலையை வருவாய் மற்றும் காவல் துறையினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர் விபத்து குறித்து மல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க | சமையல் செய்து கொண்டிருந்த பெண் மீது தீப்பற்றியதால் பரபரப்பு...