“என் மகளை மீட்டுத் தாருங்கள்”... மனைவியுடன் அதிகாரியிடம் கெஞ்சிய ஆட்டோ டிரைவர்...

தனது 17 வயது மகளைக் காப்பாற்றக் கோரி, குளிச்சலை சேர்ந்த ஆட்டோ டிரைவர் தனது மனைவியுடன் சேர்ந்து மனு கொடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“என் மகளை மீட்டுத் தாருங்கள்”... மனைவியுடன் அதிகாரியிடம் கெஞ்சிய ஆட்டோ டிரைவர்...

கன்னியாகுமரி | குளச்சலை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார், கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் பள்ளி சென்ற இவயது 17 வயது மகள் ஆதிராவை பிரபல கஞ்சா வியாபாரியான இளைஞர் ஜூவிமோன் கடத்திச் சென்றதாக ரவிச்சந்திரன் குளச்சல் போலீசில் புகார் செய்தார்.

புகார் அளித்து இன்றுடன் 35 நாட்கள் ஆகியும் போலீசார் இதுகுறித்து எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

மேலும் படிக்க | பொது இடங்களில் மது அருந்துவதை தடுக்கக் கோரிய வழக்கு...! தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு...!

மேலும் தனது மகளை கடத்தி சென்ற ஜூவிமோனான கஞ்சா வியாபாரி மீது பல்வேறு வழக்குகள் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளதாகவும் கடந்த 2021 ஆம் ஆண்டு கஞ்சா விற்பனை தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்ததால் தனது வீடு மற்றும் பொருள்களை அடித்து உடைத்து சேதப்படுத்தியதாகவும் ஏற்கனவே குளச்சல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக ரவி சந்திரன் தெரிவித்தார்.

இந்த நிலையில் தனது மகளுடன் மோட்டார் பைக்கில் சென்றது குறித்து போலீசாரிடம் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்று அவர் குமரிமாவட்ட போலீஸ் கண்காணிப்பாளரிடம் தனது மனைவியுடன் வந்து மனு கொடுத்தார். மேலும் தனது மகளை உடனடியாக கண்டுபிடித்து தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என தெரிவித்தனர்.

மேலும் படிக்க | என்.ஐ.ஏ அதிகாரிகள் என ஏமாற்றிய மர்ம கும்பல்....! வெளியான சிசிடிவி காட்சிகள்...!