திமுக நிர்வாகி ரயில் முன் பாய்ந்து தற்கொலை...!!

திமுக நிர்வாகி ரயில் முன் பாய்ந்து தற்கொலை...!!

பழனியில் குடும்ப வறுமை காரணமாக திமுக பிரமுகர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

பழனி கோட்டைமேட்டு தெருவில் வசித்து வந்தவர் ராஜா முகமது (60),  திருமணம் ஆகி மனைவி , மகளுடன் வசித்து வந்தார். கடந்த சில வருடங்களாக ராஜா முகமதின் மனைவி மற்றும் மகளுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. இதனால் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர். மேலும் ராஜா முகமது பழனியில் உள்ள பள்ளிவாசலில் தற்காலிக பணியாளராக இருந்த நிலையில் அவரது வேலையும் போனதால் குடும்பம் வறுமையில் இருந்து வந்துள்ளது.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தீவிர தொண்டராகவும், விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளராகவும் ராஜமுகமது இருந்துள்ளார். குடும்பத்தின் வறுமை காரணமாக மன உளைச்சலில் இருந்த ராஜா முகமது கோதைமங்கலம் ரயில்வே தண்டவாளத்தில் திருவனந்தபுரத்திலிருந்து மதுரைக்கு சென்ற ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். 

தகவல் அறிந்த ரயில்வே போலீசார் ராஜா முகமதின் உடலை மீட்டு பழனி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். குடும்ப வறுமை காரணமாக திமுக பிரதிநிதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க:பிக் பாஸில் அசிம் போலியாக வெற்றி பெற்றதாக கமிஷ்னர் அலுவலகத்தில் புகார்...!!