பிளேடால் கழுத்தை அறுத்த சக மாணவனுக்கு வலைவீச்சு...

கலைக் கல்லூரியில் தங்கைக்கு காதல் தொல்லை கொடுத்ததை தட்டிக் கேட்டதால், அண்ணனின் கழுத்தை அறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிளேடால் கழுத்தை அறுத்த சக மாணவனுக்கு வலைவீச்சு...

கிருஷ்ணகிரி அருகே மட்டாரப்பள்ளி கிராமத்தை சேர்ந்த சின்ன திருப்பதி என்பவர், கிருஷ்ணகிரி ஆடவர் கலைக்கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறார்.

இதே கல்லூரியில் படித்து வரும் தனது தங்கைக்கு, லிங்கேஸ்வரன் என்ற சக மாணவன் காதல் தொல்லை கொடுத்து வந்ததால், இதனை சின்ன திருப்பதி தட்டிக் கேட்டுள்ளார். இதனால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் லிங்கேஸ்வரன் தன் கையில் மறைத்து வைத்திருந்த பிளேடால் சின்ன திருப்பதியின் கழுத்தை அறுத்துள்ளார். இதில் சின்ன திருப்பதி, ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தலைமறைவான லிங்கேஸ்வரனை போலீசார் தேடி வருகின்றனர். 

மேலும் படிக்க | தாய் கண் முன்னே தந்தையை 14 இடங்களில் வெட்டிக் கொலை செய்த மகன்!