இனிமே பிரியாணி சாப்பிட்டா பாத்து சாப்பிடுங்கப்பா...! கொத்து கொத்தாக இறக்கும் வாலிபர்கள்...

தேன்கனிக்கோட்டையில் நண்பர்களுடன் பிரியாணி சாப்பிட்ட வாலிபர் மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இனிமே பிரியாணி சாப்பிட்டா பாத்து சாப்பிடுங்கப்பா...! கொத்து கொத்தாக இறக்கும் வாலிபர்கள்...

கிருஷ்ணகிரி | ஊத்தங்கரை அடுத்த தலக்கம்பட்டி பகுதியை சேர்ந்த தீர்த்தகிரி என்பவரது மகன் அருண்குமார். இவருக்கு வயது 24. இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தேர்பேட்டை பகுதியில் தங்கி அங்குள்ள பர்னிச்சர் கடையில் வேலை செய்து வந்துள்ளார்.

இன்று மதியம் அருண்குமார் தனது அறையில் நண்பர்களுடன் பிரியாணி உணவை சாப்பிட்டுள்ளார். அப்போது அவருக்கு வாந்தி ஏற்பட்டுள்ளது. பின்னர் மூச்சு தினறல் ஏற்பட்டு நெஞ்சு வழிப்பதாக அவர் நண்பர்களிடம் தெரிவித்துள்ளார். உடனடியாக அவரை நண்பர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்தவர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரியாணி சாப்பிட்டவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | டெலிவரி ஊழியரை சிதைத்த லாரி டிரைவர் தப்ப முயற்சி...