மன்னார்குடி ஆருத்ரா தரிசனத்திற்கு கூடிய ஏராளமான பக்தர்கள்...

மன்னார்குடியில், அஷ்டமூர்த்தி சங்கமம், ஆருத்ரா தரிசனவிழா, ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

மன்னார்குடி ஆருத்ரா தரிசனத்திற்கு கூடிய ஏராளமான பக்தர்கள்...

திருவாரூர் | மன்னார்குடியில்  திருவாதிரையையொட்டி, அஷ்டமூர்த்திகள், சங்கமிக்கும், ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது.

இதில், உண்ணாமுலை உடனுறை ஸ்ரீஅண்ணாமலை நாதர், அமிர்தநாயகி உடனுறை நீலகண்டேஸ்வரர், தெப்பகுளம் விசாலாட்சி உடனுறை, காசிவிஸ்வநாதர், பிரஹன் நாயகி உடனுறை ஜெயங்கொண்டநாதர், திருப்பாற்கடல் விசாலாட்சி, உடனுறை காசிவிஸ்வநாதர், மீனாட்சி உடனுறை, சொக்கநாதர், பெரியநாயகி உடனுறை கைலாசநாதர், ஆகிய உற்சவ மூர்த்திகள், மன்னார்குடி ராஜகோபாலசுவாமி, ஆலயம் முன்பு எழுந்தருளி, பக்தர்களுக்கு, சிறப்பு அலங்காரத்தில், காட்சியளித்தனர்.

இதில் சிவனடியார்கள், திருவாசகம், பஞ்சபுராணம் பாடினார்கள். இதை தொடர்ந்து, உற்சவர்களுக்கு, மஹா தீபாராதனை, நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான, பக்தர்கள் கலந்து கொண்டு, ஹர ஹர மஹா தேவா, என விண்ணதிர கோஷமெழுப்பியதுடன், தரிசித்து மகிழ்ந்தனர்.

மேலும் படிக்க | சிதம்பரம் : ஆருத்ரா தரிசனம்...! நடராஜரை காண குவிந்த பக்தர்கள் கூட்டம் ..!