ஊருக்குள் புகுந்து கத்தி காட்டி மிரட்டிய இளைஞர்கள்...

ஊருக்குள் புகுந்து கத்தியை காட்டி ரகளையில் ஈடுபட்ட 2 இளைஞர்களை பிடித்து பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர்.

ஊருக்குள் புகுந்து கத்தி காட்டி மிரட்டிய இளைஞர்கள்...

கடலூர் | புதுப்பேட்டை அருகே உள்ள சிறுகிராமம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர் ஒருவரை பார்ப்பதற்காக 2 இளைஞர்கள் வந்துள்ளனர்.

அப்போது மதுபோதையில் இருந்த அவர்கள் கையில் பட்டா கத்தியுடன் ஊருக்குள் சத்தம் போட்டவாறு இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்று பொதுமக்கள் மற்றும் மாணவர்களை அச்சுறுத்தும் வகையில் ரகளையில் ஈடுபட்டனர்.

இதையடுத்து இருவரையும் சுற்றி வளைத்து பிடித்த பொதுமக்கள் இதுகுறித்து புதுப்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

மேலும் படிக்க | புகையிலைப்பொருட்களை தடை செயவதற்கான அவசர சிறப்பு சட்டத்தை தமிழக அரசு கொண்டு வரனும்

அதன் பேரில் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரகளையில் ஈடுபட்ட இளைஞர்களிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டம், காந்தளவாடி பகுதியை சேர்ந்த தட்சிணாமூர்த்தி மகன் திவான் (வயது 23), தனசேகர் மகன் முருகன் (23)என்பதும், இருவரும் சமையல் வேலை செய்பவர்கள் என்பதும் தெரிய வந்தது.

இது சம்பந்தமாக புதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்ட இரு இளைஞர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க | மாணவி குளிப்பதை செல்போனில் வீடியோ பதிவு செய்த நபரை போக்சோவில் கைது.....