விருதாசலத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம்!

விருதாசலத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம்!

விருத்தாசலத்தில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக சி.ஐ. டி.யு தொழிற்சங்கம் சார்பில் 25 சதவீத போனஸ் வழங்கவும் மேலும் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழ்நாடு அரசை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு சி.ஐ. டி.யூ தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளர்களை மதித்து குறைந்தபட்ச கூலி அ டிப்படையில் உச்சவரம்பின்றி 25 சதவீத போனசை உடன டியாக வழங்கக் கோரியும் கடந்த பத்து வருட அதிமுக ஆட்சியில் தொழிலாளர்களுக்கு வழங்கிய தண்டனைகளை ரத்து செய்யக் கோரியும், பணியாளர்களை கட்டாயப்படுத்தி ஓவர்டைம் பணிசெய்ய கூறக் கூடாது, தேவையான உதிரிபாகங்களை, தரமான உதிரிபாகங்களை வழங்க கோரிக்கை விடுத்தனர். காலியாக உள்ள ஓட்டுநர், நடத்துனர், தொழில்நுட்பப் பணியாளர்கள் இடங்களை உடன டியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் சிஐ டியு பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.