இலங்கைத் தமிழர்களுக்கான நலத் திட்டங்களை தொடங்கி வைத்தார் கனிமொழி!

இலங்கைத் தமிழர்களுக்கான நலத் திட்டங்களை தொடங்கி வைத்தார் கனிமொழி!

இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வாழும் தமிழர்களுக்கு தமிழ்நாடு அரசு பல்வேறு நலத்திட்டங்களை தொடர்ச்சியாக செய்து வருகிறது. தமிழக முதல்வரின் வழிகாட்டுதலோடு கடந்த ஆண்டு முதல் புதிய திட்டங்களுக்கு குறிப்பாக மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் நிரந்தர வீடுகள் கட்டும் திட்டம் முனைப்போடு முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 

மகளிர் சுய உதவிக் குழுக்கள்

மறுவாழ்வு முகாம்களில் வாழும் பெண்களின் திறனை சூழலை மேம்படுத்த 300 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு நிதியாகவும், சமுதாய மேம்பாட்டு நிதியாகவும் குழு ஒன்றுக்கு தலா 1,25.000 ரூபா ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இலங்கை தமிழர் நல வாழ் மக்களின் சுய சார்பினையும், மகளிர் மேம்பாட்டினையும் மேம்படுத்தி சில சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தெடுக்கப்பட்ட மகளிர்களை ஒருங்கிணைத்து சாதனைப்பூக்கள் என்ற உணவு உற்பத்திக் குழு என்ற பெயரில் உருவாக்கி அதன் மூலம் ஒலைப்புட்டு இலங்கைத்தமிழர் பாரம்பரியம் உணவகம் திறக்கப்பட்டது. 

தூத்துக்குடி தச்சர் தெருவில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் நலத்துறை அமைச்சர் கீதாஜீவன், மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் சாரு ஸ்ரீ ஆகியோர் முன்னிலையில், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்த உணவகம் அமைவதற்கான சிறப்பு திட்டத்தை ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழகம் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளின் அமைப்பின் உதவியோடு செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

வணிகத் திட்டம் உருவாக்கம்

இத்திட்டம் சுய உதவிக்குழு உறுப்பினர்களை சிறப்பான வணிக திட்டத்தை பயிற்றுவித்ததோடு, உருவாக்குவதற்கும் உதவி புரிந்துள்ளது. இந்த உணவக ஒருங்கிணைப்பாளர் குளத்துவாய்ப்பட்டி முகாமை சார்ந்த வசந்தி கூறும்போது " எங்களுக்கு இப்படி ஒரு வாய்ப்பு அரசின் மூலமாகவும் மற்ற நிறுவனங்களின் உதவியோடு கிடைக்கும் என்ற கனவு இன்று நிறைவு பெற்றுள்ளது . எங்களைப்போல் தமிழகம் முழுவதும் உள்ள திறமையோடும் ஆர்வத்தோடும் இவ்வாறான வாய்ப்புகளை மகளிர் பெறுவதற்கு தயார் நிலையில் உள்ளனர். இவ்வுணவகத்தில் எங்களது சிறப்பான செயல்பாடுகள் மற்ற மகளிர் குழுக்களுக்கும் சிறப்பான வழிகாட்டுதலாக அமையும்.

இலங்கை மற்றும் இந்தியாவில் உள்ள  பிரபலமான உணவுகளான கடல் உணவுகள், அப்பம், தட்டை, இடியாப்பம், புட்டு, சொதி, போன்ற உணவுகள் உள்ளனர்.மேலும், எங்களது குடும்ப உறுப்பினர்களின் துணையோடு எங்களது வெற்றி குழந்தைகளின் சுய சார்பினையும் வாழ்க்கை மேம்பாட்டையும் உறுதிப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தை உருவாக்கி வழிகாட்டிய தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர்கள், மேயருக்கு நன்றியை தெரிவித்தார்.

இலங்கைத் தமிழர்களின் நலனுக்கான செயல்பாடு

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி  கூறுகையில், தமிழ்நாடு முதலமைச்சர் இலங்கைத் தமிழர்களுக்காக மறுவாழ்வு வீடு, வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும், உரிமைகளுக்காகவும் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். அதற்கான திட்டங்களை ஏற்படுத்தி  கொண்டிருக்கிறார். அந்த திட்டங்களின் ஒரு பகுதியாக தூத்துக்குடியில், இருக்கக்கூடிய முகாம்களில் இருக்கும் பெண்களை ஒருங்கிணைக்கப்பட்டு பல நிறுவனங்கள் உதவியோடு இலங்கைத் தமிழர்களுடைய பாரம்பரிய ஓலைபுட்டு கடை உணவகம் திறக்கப்பட்டது.

தமிழை திமுக அளிப்பதாக பாஜக தலைவர் அண்ணாமலை கூறிய குற்றச்சாட்டுக்கு கனிமொழி எம்பி கூறுகையில், யார் தமிழை வளர்கிறார்கள்? யார் தமிழை அழிக்க நினைக்கிறார்கள்? என மக்களுக்கு தெரியும். மேலும், தொடர்ந்து மாணவர்கள் மருத்துவக் கல்லூரி படிக்க முடியாத ஒரு நிலையை உருவாக்கிய அந்த மனசாட்சியோடு பேச வேண்டும். தமிழர்களுக்கு எதிரான தமிழ் மொழியை அழித்து கொண்டு ஹிந்தியை கொண்டு வருவது யார் என மக்களுக்கு தெரியும். இவ்வாறு கனிமொழி கூறினார்.