தூத்துக்குடி ஆட்சியர் உத்தரவை மீறி செயல்பட்ட தனியார் பள்ளி!

தூத்துக்குடி ஆட்சியர் உத்தரவை மீறி செயல்பட்ட தனியார் பள்ளி!

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நேற்று இரவு முதல் தொடர் மழை பெய்து வந்ததால் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் இன்று ஒரு நாள் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து உத்தரவிட்டார். இந்த நிலையில் சாத்தான்குளம் அருகே புதுக்குளம் விலக்கு பகுதியில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி மாவட்ட ஆட்சியரின் உத்தரவினை மீறி இன்று முழு நேரமும் வழக்கம்போல செயல்பட்டு வருகிறது.

இதனால் காலை 11 மணி வரையிலும் பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பள்ளியில் கொண்டு சென்று விட்டவாறு உள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியரின் உத்தரவை ஏற்று மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளி விடுமுறை அறிவித்த நிலையில் இந்த தனியார் பள்ளி செயல்பட்டு வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது.