மது போதையில் தகராறு செய்த இளைஞர்கள்...

விருத்தாசலத்தில் மதுபோதையில் இளைஞர்கள் குடியிருப்பு பகுதியில் கேட்டை உடைத்து தகராறில் ஈடுபடும் வீடியோ வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

மது போதையில் தகராறு செய்த இளைஞர்கள்...

கடலூர் : விருத்தாச்சலம் ஆலடிரோடு பகுதியில் நேற்று இரவு மது போதையில் இளைஞர்கள் குடியிருப்பு பகுதியில் கேட்டை உடைத்து தகராறில் ஈடுபடும் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து விருத்தாச்சலம் காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டதன் பேரில் விரைந்து வந்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் குடியிருப்பு பகுதியில் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க | புதைத்த குழந்தை தலை காணவில்லை... கிரகணத்தில் கடத்தப்பட்டதாக தகவல்...

முதற்கட்ட விசாரணையில் நேற்று இரவு மதுபோதையில் இளைஞர்கள் பட்டாசுகள் வெடித்ததாகவும் அப்போது இது குறித்து எதிர் வீட்டில் வசிக்கக்கூடிய பொதுமக்கள் கேள்வி கேட்டதால் இரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. மது போதையில் இருந்த இளைஞர்கள் குடியிருப்பு பகுதியில் வசிக்கும் மக்களை தாக்குவதற்காக கேட்டை உடைத்து கொண்டு உள்ளே செல்ல முயற்சித்தனர்.

இச்சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து விருத்தாசலம் காவல் நிலையத்திற்கு புகார் அளித்ததன் பேரில்குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட இளைஞர்களை வீடியோ பதிவை வைத்து தேடி வருகிறார்கள்.

மேலும் இதுபோன்று இளைஞர்கள் மது போதையில் அடிக்கடி தாக்கிக்கொள்வது விருத்தாச்சலம் பகுதியில் தொடர்கதையாகி வருவதாகவும் இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

மேலும் படிக்க |  ஆறாவது மாடியில் இருந்து தற்கொலை செய்து கொண்ட நபரால் பரபரப்பு...