மும்பையில் ரூபாய் 8 கோடிக்கு அபார்ட்மெண்ட் வீடு வாங்கிய நடிகர் அக்ஷய்குமார்!! இவ்வளவு சொத்து மதிப்பா..? வாய் பிளக்கும் ரசிகர்கள்

பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் மும்பையின் மையப்பகுதியில் அபார்ட்மெண்ட் வீடு ஒன்றை வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மும்பையில் ரூபாய் 8 கோடிக்கு அபார்ட்மெண்ட் வீடு வாங்கிய நடிகர் அக்ஷய்குமார்!! இவ்வளவு சொத்து மதிப்பா..? வாய் பிளக்கும் ரசிகர்கள்

தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவான ‘2.0’  படத்தில் ’பட்சி ராஜன்’ என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் அக்ஷய்குமார்.

பாலிவுட்டில் பிரபலமாக இருக்கும் இவர் ஏற்கனவே மும்பையில் பல சொத்துக்கள் வைத்திருக்கும் நிலையில் தற்போது மும்பையின் மையப்பகுதியில் ஒரு அபார்ட்மெண்ட் வீட்டை வாங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த அப்பார்ட்மெண்ட் வீட்டின் மதிப்பு ரூபாய் 7.8 கோடி என்றும், கடந்த 7ஆம் தேதி தான் இந்த வீடு ரிஜிஸ்டர் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. சுமார் 1878 சதுர அடி கொண்ட இந்த அப்பார்ட்மெண்டில் 4 கார் பார்க்கிங் இருப்பதாகவும், இந்த அபார்ட்மென்ட்டில் அக்ஷய்குமார் வாங்கிய வீடு 19 ஆவது மாடியில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.  

இந்நிலையில் இவருக்கு ஏற்கனவே மும்பை ஜூஹூ என்ற பகுதியில் சொகுசு பங்களா ஒன்றும், அதுமட்டுமின்றி கோவா மற்றும் மொரீசியசில் அவருக்கு ஏராளமான சொத்துக்கள் இருப்பதும், இதற்கிடையில் தற்போது மீண்டும் ஒரு அபார்மெண்ட் வாங்கி இருப்பது ரசிகர்களை வாய் பிளக்க வைத்துள்ளது.