ஸ்புட்னிக் தடுப்பூசி செலுத்திக் கொண்ட நடிகர் ஜெய்!

முதல் தவணை ஸ்புட்னிக் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக நடிகர் ஜெய்  தெரிவித்துள்ளார். 

ஸ்புட்னிக் தடுப்பூசி செலுத்திக் கொண்ட நடிகர் ஜெய்!

திரை பிரபலங்கள் தற்போது கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டு வருகின்றனர். கொரோனா தடுப்பூசி செலுத்துவதோடு விடாமல் ரசிகர்களுடன் பகிர்ந்து அவர்களுக்கும் தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

தற்போது நடிகர் ஜெய் முதல் தவணை கொரோனா தடுப்பூசிகள் செலுத்திக் கொண்டுள்ளார். அவர் ஸ்புட்னிக்(Sputnik)தடுப்பூசி செலுத்திக் கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.  

இதற்கிடையில் ஜெய் பிரேக்கிங் நியூஸ், எண்ணித் துணிக என இரண்டு படங்கள் இயக்குனர் சுசீந்திரன் உடன் கூட்டணி அமைத்து நடித்து வருகிறார். மேலும் அட்லி தயாரிப்பில் உருவாகயிருக்கும் ஒரு படத்திலும் ஜெய் வில்லனாக நடிப்பதாக கூறப்பட்டு வருகிறது.