நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பலத்த காயம்.. ரசிகர்கள் சோகம்

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் பிரகாஷ்ராஜும் ஒருவர்.

நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பலத்த காயம்.. ரசிகர்கள் சோகம்

கதாநாயகன், வில்லன், குணச்சித்திரம் என அனைத்து கதாபாத்திரங்களிலும் தனது நடிப்புத் திறமையை அற்புதமாக வெளிப்படுத்தி வருகிறார்.

விஜய் மற்றும் திரிஷா நடிப்பில் வெளியான கில்லி படத்தில் பிரகாஷ்ராஜின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. அப்படத்தில் இவர் பேசும் வசனங்கள் தற்போதுவரை பிரபலமாக உள்ளது.  இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மற்றும் மராத்தி ஆகிய மொழிப்படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது வரை தொடர்ந்து படங்களில் நடித்து வரும் பிரகாஷ் ராஜ் கோவளத்தில் உள்ள அவரது இல்லத்தில் தங்கி உள்ளார். இந்நிலையில் நேற்று தனது வீட்டில் சறுக்கி விழுந்த பிரகாஷ்ராஜ்க்கு இடது தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதையடுத்து முறைப்படி சிகிச்சை மேற்கொள்ள பிரகாஷ்ராஜ் ஹைதராபாத் சென்றுள்ளார். இது குறித்து அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “ஒரு சிறிய விபத்து, லேசான எலும்பு முறிவு தான். பாதுகாப்பு கருதி ஹைதராபாத்தில் உள்ள நண்பர் டாக்டர் குருவாரெட்டியிடம் செல்கிறேன். இது எல்லாம் சரியாகிவிடும்” என்று குறிப்பிட்டுள்ளார். இச்செய்தி அறிந்த அவரது ரசிகர்கள் பிரகாஷ்ராஜ் விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.