இமயமலை செல்கிறார் நடிகர் ரஜினிகாந்த்!

இமயமலை செல்கிறார் நடிகர் ரஜினிகாந்த்!

நடிகர் ரஜினிகாந்த் 7 நாள்  பயணமாக  இமயமலைக்கு ஆன்மீக பயணம் செல்வதற்கு சென்னை விமான நிலையம் வந்தார்.

நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, வரும் ஆக. 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இதற்கான இறுதிகட்டப் பணிகளில் படக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் படத்தின் ‘காவாலா என் மூன்று படைகள் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. படத்தின் ட்ரெய்லரும் வெளியாகி நல்ல வரவேற்பு ரசிகர்கள் இடையே பெற்றது. நடிகர் ரஜினிகாந்த் கடந்த 2010-ம் ஆண்டு வரை தனது ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும், இமயமலைக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக இடையில் சில ஆண்டுகளாக அவர் இமயமலை செல்வதை தவிர்த்துவந்தார். கடந்த 2018-ல் ‘காலா’, ‘2.0’ ஆகிய படங்களின் படப்பிடிப்பு முடிந்ததும், இமயமலைக்குச் சென்றார். அதன்பிறகு கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இமயமலைக்குச் மேலாக செல்லவில்லை. தற்போது மீண்டும் இமயமலைக்கு செல்ல இருக்கிறார். மேலும் கடந்த மாதம் 15 ஆம் தேதி மாலத்தீவு இலங்கை உள்ளிட்ட பகுதிகளில் ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்ட நடிகர் ரஜினிகாந்த் அந்த சுற்றுப்பயணத்தின் தொடர்ச்சியாக இன்று பெங்களூரு சென்று பெங்களூரில் இருந்து டேராடூன் வழியாக ரஜினிகாந்த் இமயமலை செல்ல இருப்பதும் குறிப்பிடத்தக்கது.  இந்த ஒரு வார காலத்தில் இமயமலை ஆன்மீக சுற்றுப்பயணத்தில்  பத்ரிநாத், கேதர்நாத், பாபாஜி குகை உள்ளிட்ட புனித தலங்களுக்கும் அவர் செல்கிறார்.

இதற்கு முன்பெல்லாம் இமயமலை செல்லும்போது, அவரது மகள்களில் ஒருவரை உடன் அழைத்துச் செல்வது வழக்கம். ஆனால், இந்த முறை ரஜினிகாந்த் மட்டும் தனியாக இமயமலை செல்கிறார்.

 இமயமலைக்கு செல்ல உள்ளதால், நேற்று பட்டினம்பாக்கம் பகுதியில் ஜெயிலர் திரைப்படத்தின் இயக்குனர் நெல்சன் தயாரிப்பாளர் கலாநிதி இசையமைப்பாளர் அனிருத் நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் படத்தின் முன்னோட்டக் காட்சியைப் பார்த்துவிட்டு, படக்குழுவினரிடம் தனது கருத்துகளைக் நடிகர் ரஜினிகாந்த் பகிர்ந்து கொண்ட நிலையில் இமயமலை செல்வதற்கு சென்னை விமான நிலையம் வந்தடைந்தார் நடிகர் ரஜினிகாந்த்,

 மேலும் ஜெயிலர் படம் திரையரங்குகளில் வெளியாகும் போது அவர் இமயமலையில் இருப்பார் என்றும் ரஜினிகாந்தின் நெருங்கிய ரசிகர்கள் வட்டாரங்கள் தெரிவித்தனர்.

இதையும் படிக்க:கோச்சடையான் தயாரிப்பாளருக்கு 6 மாதம் சிறை; உறுதி செய்த அமர்வு நீதிமன்றம்!