அப்படி என்ன போட்டோ...வேற லெவல் அக்கா-ன்னு ஐஸ்வர்யாவை பாராட்டும் ரசிகர்கள்!!

அப்படி என்ன போட்டோ...வேற லெவல் அக்கா-ன்னு ஐஸ்வர்யாவை பாராட்டும் ரசிகர்கள்!!

நடிகர் தனுஷும்  ஐஸ்வர்யாவும் கடந்த 2004ஆம் ஆண்டு காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.  தற்போது  இவர்கள் இருவரும் தங்களது 18 ஆண்டுகால திருமண பந்தத்தை முறித்துக் கொள்வதாக சமூக வலைதளத்தில் அறிவித்திருந்தனர். இந்த அறிவிப்பு ஒட்டுமொத்த திரையுலகினரையும், ரசிகர்களையும் வருத்தத்தில் ஆழ்த்தியது என்றே சொல்லலாம்.

அதற்குபிறகு  இருவரும் விரைவில் சேர்ந்து விடுவார்கள் என கூறப்பட்டு வந்தாலும் தனுஷும் ஐஸ்வர்யாவும் இன்னும் வாயே திறக்காமல் உள்ளனர். ஒரு பக்கம் ஐஸ்வர்யா விருப்பம் தெரிவித்தாலும் தனுஷின் பிடிவாதம் தான் இருவரும் மீண்டும் இணைய தடையாக இருப்பதாக கூறப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து இருவரும் அவரவர் வேலைகளில் பிஸியாக இருந்து வருகின்றனர். தனுஷ் நானே வருவேன் மற்றும் மாறன், வாத்தி போன்ற படங்களில் பிஸியாக உள்ளார். இதேபோல் ஐஸ்வர்யாவும் ஷூட்டிங், எடிட்டிங் என கவனம் செலுத்தி வருவதோடு, இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இவர், தான் செய்யும் வேலைகள் குறித்து அவ்வப்போது அப்டேட் செய்து வருகிறார். அந்த வகையில் நேற்று கேமராவுக்கு முன்பு நின்ற போட்டோவை ஷேர் செய்து உருக்கமாக பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் ஐஸ்வர்யா காலையிலேயே தான் செய்த வேலையை இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அட என்ன வேலைன்னு பாக்குறீங்களா...எடிட்டிங்கில் தனது டீம்முடன் ஈடுபட்டிருந்த போது எடுத்த போட்டோவை காலையிலேயே தனது டீம் பசங்களுடன் எடிட்டிங்கில் இருப்பதாக கூறி அந்த போட்டோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அதோடுமட்டுமில்லாமல், கையில் மைக்குடன் இருக்கும் மற்றொரு போட்டோவை ஷேர் செய்துள்ள ஐஸ்வர்யா, அந்த போட்டோவுக்கு '’பேக் அப் சொல்கிறோம்... என்ன ஒரு ரைடு இது’’ என்று கேப்ஷன் கொடுத்துள்ளார். இந்த போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் வேற லெவல் அக்கா என கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.