நடிச்ச ஒரு படமும் ரிலீஸ் ஆகல...மீண்டும் சின்னத்திரைக்கு கம் பேக் கொடுக்கும் அஸ்வின்..?

வெள்ளித்திரையிலிருந்து மீண்டும் சின்னத்திரையா...

நடிச்ச ஒரு படமும் ரிலீஸ் ஆகல...மீண்டும் சின்னத்திரைக்கு கம் பேக் கொடுக்கும் அஸ்வின்..?

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்ற அஸ்வின் மீண்டும் சின்னத்திரையில் நடிக்க உள்ளதாக செய்திகள் சமூக வலைத்தளத்தில் தீயாய் பரவி வருகிறது.

நெட்டிசென்களால் ஸ்லீப்பிங் ஸ்டார் என்று அன்போடு அழைக்கப்படும் அகிலவுலக ஆணழகன் அஸ்வின். இவரை தெரியாதவர்கள் இந்த உலகிலேயே யாரும் இருக்கமுடியாது.

ஒரே வார்த்தை ஓஹோன்னு வாழ்க்கை என்பதுபோல் குக் வித் கோமாளி எனும் ஒரே நிகழ்ச்சியின் மூலம் உலக பெண்களின் கனவு கண்ணனாக  மாறிவிட்டார். தலைவன் நின்னா அழகு, நடந்தா அழகு, பாத்தா அழகு, பேசுனா அழகு, அழகோ அழகு அழகுக்கெல்லாம் அழகு என்று அவரின் ரசிகைகள் உளறியதை உண்மை என்று நினைத்து ஆழ்மனதில் நான் ஒரு ஆணழகன் என்று strongஆ நம்ப ஆரம்பித்துவிட்டார்.

அவருக்குள்ள அந்த நம்பிக்கை ஒரு நெருப்பாக கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருக்கும் வேளையில் அதில் என்னை ஊற்றுவது போல் இவரை வைத்து எடுத்த ஆல்பம் song அனைத்தும் அமோக வெற்றி அடைந்தது. தமிழ் சினிமாவில் தன்னை அறிமுகமாக்கி கொள்ள நினைக்கும் assistant directors அஸ்வினின் பாட்டே இப்படி ஓடுதே அப்போ படம் எப்படி ஓடும்னு என்று எண்ணி இவரை வைத்து படம் எடுக்க முடிவுசெய்து இவரிடம் வந்து கதை சொல்லியுள்ளனர்.

அந்த கதையெல்லாம் தாலாட்டாய் நினைத்து தூங்கிய அஸ்வின் ஹரிஹரனின் என்ன சொல்ல போகிறாய் கதையை கேட்டு அலறியடித்து எழுந்து அதே வேகத்துல shooting போய் படத்தையும் நடித்து முடித்துவிட்டார். அந்த படத்தின் audio launchக்கு வந்த அஸ்வின் கதை கேட்டு தூங்கிய கதையை ஒளறிக்கொட்ட அதை கேட்ட அஸ்வின் heaters அனைவரும் அவர் மேல் உள்ள வன்மத்துல மீம்ஸாக போட்டு வாட்டி எடுத்துவிட்டனர். 

அதனால் மனமுடைந்த அஸ்வின் ஒரு formalityக்கு sorry சொல்லி விடியோவும் வெளியிட்டிருந்தார். அதை பார்த்த நெட்டிசன்கள் இந்த வீடியோவில் காட்டிய  நடிப்பை கொஞ்சம் படத்தில் காட்டினாள் படம் ஓடும் அதை விட்டுவிட்டு வாயில் ஓட்டாதீர்கள் என்று அறிவுரை கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள். இது என்னடா ஆணழகனுக்கு வந்த சோதனை என்று பார்த்தல் அதை விட ஒரு பெரிய சோதனையாக அவர் நடித்த என்ன சொல்ல போகிறாய் எப்போது வரும் என்று கேட்டாள் வரும் ஆனா வராதுன்னு சொல்லி அஸ்வினுக்கு ஆப்படிக்குறாங்க ஒரு வேலை theaterக்கு வரமா OTTல் வரும் என்பதை தான் இப்படி சொல்கிறார்கள் போலும்.

இப்படி சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த அஸ்வின் தற்போது மீண்டும் சின்னத்திரைக்கு வருவதாக செய்திகள் சமூக வலைதளத்தில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. விஜய் டிவியில் ஒளிப்பரப்பான இரட்டைவால் குருவி சீரியலில்  கதாநாயகனாக நடித்த அஸ்வின் தற்போது அதே சீரியலின் இரண்டாம் பாகத்தில்  நடிக்க உள்ள்ளார் என்ற செய்தி சமூக வலைத்தளத்தில் பரவி ரசிகர்களின் மத்தியில் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. 

இரட்டைவால் குருவியின் இரண்டாம் பாகத்தில் அஸ்வின் ஜோடியாக நடிகை ஆயிஷா நடிப்பதாகவும் செய்திகள் பரவி வருகிறது. இந்த செய்தியை கேட்டதும் ரசிகைகள் தினமும் இவரை டிவியில் பார்க்கலாம் என்று ஆர்வத்தோடு கூறிவருகின்றனர். அதுமட்டுமல்லாமல் இந்த சீரியல் எப்போது ஒளிபரப்பப்படும் என்று ஆர்வத்தோடு கேட்டு வருகின்றனர். ஆனால் இதைப்பற்றி அஸ்வின் தரப்பிலிருந்து இன்னும் எதுவும் சொல்ல படாததால் இது உண்மைதானா?? என்று ரசிகர்களின் மத்தியில் கேள்விகள் எழுந்து வருகிறது.