பிக்பாஸ் சீசன் 5- ல் இருந்து திருநங்கை நமிதா வெளியேற காரணம் இது தான்.......

பிக்பாஸ் நிகழ்ச்சியில் திருநங்கை நமிதா மாரிமுத்து செய்த களேபரத்தால், அவர் வெளியேற்றப்பட்டதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிக்பாஸ் சீசன் 5- ல் இருந்து திருநங்கை நமிதா வெளியேற காரணம் இது தான்.......

பிக் பாஸில் நுழைந்த திருநங்கை நமிதா மாரிமுத்து தன்னுடைய கண்ணீர்கதையை சொல்லி அனைவருடைய அனுதாபங்களை பெற்றார்.இதுவரை 8 பேர் கதைகளை  சொல்லியும் நமிதாதான் முதலிடத்தில் இருக்கிறார். விளையாட்டு வினையாகும் என்பார்கள் அது நமிதா விஷயத்தில் உண்மையாகிவிட்டது 

நான் 400 குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கிறேன் என்று சொன்னார் நமிதா , இதைக்கேட்ட தாமரைச்செல்வி 4000 குழந்தைகள் கூட தத்தெடுத்து வளர்க்கலாம் என எதார்த்தமாக சொல்ல, இந்தமாதிரி பேசினால் என்னிடம் பேசவேண்டாம் என கோபமாக சொன்னார் நமிதா. அதைதொடர்ந்து சிரித்துக்கொண்டே இருந்த தாமரை செல்வியை, மேலும் தப்பாக நினைத்துக்கொண்டார் நமீதா.

ஒரு கட்டத்தில் நமிதாவின் கோபம் அதிகமானது, அங்கிருந்தவர்கள் எவ்வளவோ சமாதானப்படுத்தியும் நமிதாவின் கோபம் அடங்கவில்லை இதனால் பிக் பாஸ் வீட்டில் உள்ள அனைத்து பொருட்களையும் தூக்கிப்போட்டு உடைத்துள்ளார்( ஆனால் இதை தொலைக்காட்சியில் காட்டவில்லை ) பின்னர் திடீரென மயங்கி விழுந்த அவரை, அங்கிருந்த சக போட்டியாளர்கள், தண்ணீர் தெளித்து எழுப்பினர்.  அப்போது நமீதா தனக்கு பிரஷர் ஏறிவிட்டது தலை சுத்துகிறது என்று சொல்ல, அங்கிருந்தவர்கள் நமிதாவை அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளார்கள். அப்போது தான்  தெரிந்தது நமிதா மாரிமுத்து ஏற்கனவே மனநோய்க்கு சிகிச்சை பெற்று வந்தது.

இதனால் பிக்பாக்ஸ் நிகழ்ச்சியில் ரெட்கார்ட் போட்டதாக சொல்கிறார்கள். ஏற்கனவே ஒருமுறை படப்பிடிப்புக்கு தாமதமாக வந்தபோது, ஏன் தாமதமாக வந்தீங்க என கேட்டதற்கு, பளார் பளார்ன்னு கன்னத்தில் அடித்துவிட்டு அடுத்த நிமிடமே காரில் ஏறி கிளம்பிவிட்டார் நமிதா. இது தொடர்பாக போலீசில் புகார் கொடுத்ததை தொடர்ந்து 2 நாட்களுக்கு பிறகு படப்பிடிப்புக்கு வந்தார்.

நமிதா வெளியேறியது பற்றி எதுவுமே சொல்லாமல் ஒரே வரியில் முடித்துக்கொண்டார் கமல். நம்மிதாவின் கதையை கேட்டு புகழ்ந்த போட்டியாளர்கள் யாரும் வாய்திறக்கவேயில்லை. ஆக நமிதாவை புகழ்ந்தவர்கள் யாரும் இதுவரை வாய்திறக்காத மர்மம் என்னவாக இருக்கும்....