சமந்தா தனுஷை தொடர்ந்து விவாகரத்துக்கு ரெடியான நடிகை ஷில்பா ஷெட்டி!! அதிர்ச்சியில் ரசிகர்கள்

சமந்தா தனுஷை தொடர்ந்து  விவாகரத்துக்கு ரெடியான நடிகை ஷில்பா ஷெட்டி!! அதிர்ச்சியில் ரசிகர்கள்

திரையுலகின் முன்னணி  நட்சத்திரங்களான நடிகர் தனுஷ் மற்றும் நடிகை சமந்தா இருவரின் விவாகரத்தை தொடர்ந்து பாலிவுட்டில்  பிரபலமான ஷில்பா ஷெட்டி அவரது கணவர் ராஜ் குந்த்ராவை விவாகரத்து செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

சமீப காலமாகவே திரை நட்சத்திரங்களின் விவாகரத்து தொடர்கதையாகவே இருந்து வருகிறது. முதலில் சமந்தா, அடுத்ததாக தனுஷ் , அவர்களின் வரிசையில் தற்போது ஷில்பா ஷெட்டியும் இணையவுள்ளது திரையுலக பிரபலங்களுக்கும், ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி ராஜ் குந்த்ரா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார் நடிகை ஷில்பா ஷெட்டி. ஆனால் இவர்களின் வாழ்க்கையில் ஒரு திடீர் திருப்பமாக கணவர் ராஜ் குந்த்ரா திடீரென்று போலீசாரால் கைது செய்யப்பட்டார். 

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா தவறான படங்கள் எடுக்கிறார் என்று போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரம் காரணமாகவே  ஷில்பா ஷெட்டி தனது கணவரை விவாகரத்து செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் வெளிவர முக்கிய காரணம் நடிகை ஷில்பா ஷெட்டியின் சமீபத்திய நடவடிக்கை தான், என்று கூறப்படுகிறது. ராஜ்குந்த்ரா தனது பெயரில் உள்ள ரூ.39 கோடி மதிப்புள்ள சொத்துக்களை ஷில்பா ஷெட்டியின் பெயருக்கு மாற்றியுள்ளாராம்.

அதுமட்மின்றி தனது கணவரின் பெயரில் இருந்த பண்ணை வீட்டை தனது பெயருக்கு மாற்றியுள்ளாராம் ஷில்பா ஷெட்டி. இதனால், பாலிவுட் திரை வட்டாரத்தில் இருவரும் இன்னும் கொஞ்சம் நாட்களில் பிரியவுள்ளார்கள் என்று தகவல் கூறப்படுகிறது.