ஆபாச பட வழக்கில் பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ராவிற்கு நிபந்தனை ஜாமின்...

ஆபாச பட வழக்கில், பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ராவிற்கு ஜாமின் வழங்கி  மும்பை நீதிமன்றம்  உத்தரவிட்டது.

ஆபாச பட வழக்கில் பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ராவிற்கு  நிபந்தனை ஜாமின்...

சில செயலிகள் மூலம் ஆபாச படங்கள் தயாரித்து, அதனை விநியோகம் செய்ததாக கடந்த பிப்ரவரி  மாதம் மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கில், நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா கடந்த ஜூலையில் கைது செய்யப்பட்டு சிறையில்  அடைகக்படப்டுள்ளார். இந்த வழக்கில், முக்கிய குற்றவாளியான ராஜ்குந்த்ரா, ஜாமின் கேட்டு மும்பை மெட்ரோ பொலிட்டன் மாஜிஸ்திரேட் நீதிமனற்த்தில்  மனுத்தாக்கல் செய்தார். இந்த நிலையில்  மனுவை விசாரித்த நீதிமன்றம்  50 ஆயிரம் ரூபாய் பிணையத்தொகை செலுத்தியதன் பேரில் ஜாமின் வழங்கியது.