புதிய கட்டுபாடுகளால் பொங்கலுக்கு வலிமை வெளியாவதில் சிக்கல்? தீவிர ஆலோசனையில் போனி கபூர்... 

புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகளால் நடிகர் அஜித் நடிப்பில் தயாராகியுள்ள வலிமை படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

புதிய கட்டுபாடுகளால் பொங்கலுக்கு வலிமை வெளியாவதில் சிக்கல்? தீவிர ஆலோசனையில் போனி கபூர்... 

வினோத் இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் வலிமை படம் ஜனவரி 13-ஆம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் ஒமைக்கிறான் பரவல் காரணமாக திரையரங்குகளில் 50% பார்வையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசு கட்டுப்பாடு விதித்திருக்கிறது. இரவுநேர ஊரடங்கு, ஞாயிறு அன்று முழு ஊரடங்கு போன்றவையும் விதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர், பிரபாஸின் ராதே ஷ்யாம் போன்ற படங்களின் ரிலீஸ் தேதிகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. அதனால் அஜித்தின் வலிமை பொங்கலுக்கு திட்டமிட்டபடி வெளியாகுமா? இல்லை ரிலீஸ் தேதியில் ஏதேனும் மாற்றம் ஏற்படுமா என்ற செய்திகளும் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டாலும் வலிமை படத்தை வெளியிடுவதில் எந்த சிக்கலும் இருக்காது. அதே சமயம் வேறு ஏதேனும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டால் மட்டுமே ரிலீசில் மாற்றத்தை கொண்டு வர வேண்டிய சூழல் ஏற்படும் என்று தெரிவித்துள்ளார். கட்டுப்பாடுகளால் வசூல் பாதிக்கப்படுமா என்றும், படத்தை வெளியிடுவது குறித்தும் திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுடன் தயாரிப்பாளர் போனி கபூர் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் வலிமை தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.