யோகிபாபு நடிப்பில் அட்டகாசமாக உருவாகும் புதிய சீரிஸ்...அதிகாரப்பூர்வமாக அறிவித்தது டிஸ்னி + ஹாட்ஸ்டார்!

யோகிபாபு நடிப்பில் அட்டகாசமாக உருவாகும் புதிய சீரிஸ்...அதிகாரப்பூர்வமாக அறிவித்தது டிஸ்னி + ஹாட்ஸ்டார்!

பிரபல ஓடிடி தளமான டிஸ்னி + ஹாட்ஸ்டார் பிரபல இயக்குநர் ராதா மோகன் இயக்கத்தில், “சட்னி சாம்பார் “ சீரிஸை அறிவித்துள்ளது.

தமிழில் தொடர்ந்து ரசிகர்களுக்கு தரமான படைப்புகளை வழங்கி வரும், இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், தனது அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக  'சட்னி - சாம்பார்' சீரிஸை அறிவித்துள்ளது. கடந்த ஜூலை 15 ஆம் தேதியன்று  பூஜையுடன் சீரிஸ் துவங்கியது.

இந்த புதிய ஒரிஜினல் சீரிஸை, ‘மொழி' முதல் காலத்தால் அழியாத பல கிளாசிக் படங்களை வழங்கிய, தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர் ராதாமோகன் இயக்க, வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பை மேற்கொள்கிறது. மேலும், நடிகர் யோகிபாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த ஒரிஜினல் சீரிஸ் அனைத்து ரசிகர்களுக்கும் விருந்தாக அமையும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிக்க : "ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி திமுக ஆட்சி" இபிஎஸ் குற்றச்சாட்டு!

இதுகுறித்து இயக்குநர் ராதாமோகன் கூறும்போது, "சட்னி - சாம்பார்” சீரிஸின் படப்பிடிப்பை, அட்டகாசமான குழுவுடன் இணைந்து மகிழ்ச்சியுடன் துவங்கியிருக்கிறோம். இது முழுக்க முழுக்க காமெடியாகவும் அனைவரும் ரசிக்கும்படியான படைப்பாகவும் இருக்கும் என தெரிவித்தார். யோகி பாபு மற்றும் வாணி போஜன் மட்டுமில்லாமல், இந்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் சீரிஸில் 'கயல்' சந்திரமௌலி, நிதின் சத்யா, சார்லி மற்றும் குமரவேல் உட்பட பல முக்கிய நட்சத்திரங்கள் நடிப்பதாக கூறினார்.

தொடர்ந்து நடிகர் யோகிபாபு கூறும்போது, "சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசித்து பார்க்கும்படியான ஒரு அருமையான சிரீஸாக "சட்னி சாம்பார்"  இருக்கும்" என்று கூறினார்.

நடிகை வாணி போஜன் கூறும்போது, "டிஸ்னி + ஹாட்ஸ்டாரின் மற்றொரு படைப்பில் இணைவது பெரும் மகிழ்ச்சி. யோகிபாபுவுடன் நடிப்பது இதுவே முதன்முறை. எனக்கு மிகவும் பிடித்த இயக்குநர் ராதா மோகன் சார் இயக்கத்தில் பணிபுரியப் போகிறேன். கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் அட்டகாசமான சிரீஸாக இது இருக்கும்" என்றார்.