ஒளிப்பதிவு சட்டதிருத்த மசோதா-2021... ரஜினியின் நிலைப்பாடு என்ன..? இயக்குனர் தங்கர் பச்சான் கேள்வி...

ஒளிப்பதிவு சட்டதிருத்த மசோதா-2021... ரஜினியின் நிலைப்பாடு என்ன..?   இயக்குனர் தங்கர் பச்சான் கேள்வி...
தனது பெயரில் அவதூறு கருத்துகளை சமூக வலைதளங்களில் பரப்புவோர் மீது நடவடிக்கை
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இயக்குனரும் நடிகருமான தங்கர் பச்சான் புகார் மனு ஒன்றை அளித்தார்.
 
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தங்கர் பச்சான்...
 
நான் 30 வருடங்களுக்கு மேலாக தமிழ்  ரைப்படத்துறையிலும்  தமிழ் இலக்கிய துறையிலும் தொடர்ந்து ஈடுபட்டு இயங்கி வருகின்றேன்.
 
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக   தான் வெளியிடாத கருத்துகளை தனது பெயரில் தனது உருவப்படத்தை பயன்படுத்தி சமூக வலைதளங்களில் பரப்பி தனது பொது வாழ்விலும் திரைப்படத்துறையிலும் தனக்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
 
இது தொடர்பாக எச்சரிக்கை விடுக்கும் வண்ணம் கடந்த ஜூலை 13 ,2020 ஆண்டு ஊடங்களிலும் சமூக இணைய தளங்களிலும் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தேன்.
 
இந்நிலையில் தான் ஒளிப்பதிவு சட்டதிருத்த மசோதாவிற்கு ஆதரவு தெரிவிப்பது போல் பிரபல தொலைக்காட்சி ஒன்றின் லோகவை பயன்படுத்தி அவதூறு பரப்பி வருகின்றனர்.
 
இவ்வாறான பொய்செய்திகளை பரப்பி வருபவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளேன் என தெரிவித்தார்.
 
மேலும் இது போன்று பிற நடிகர்களின் பெயரையும் பயன்படுத்தி அவதூறு கருத்துகளை பரப்ப முடியாதவாறு நடவடிக்கை எடுக்கவும் வேண்டுகோள் விடுத்தேன் என தெரிவித்தார்.
 
ஒளிப்பதிவு சட்டதிருத்த மசோதா குறித்த செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த  அவர், ஒளிப்பதிவு  சட்ட திருத்த மசோதா ஆபத்தானது இது தொழிலை அழிக்க கூடிய வேலை என ஒளிப்பதிவு திருத்தசட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
 
ஒளிப்பதிவு சட்டதிருத்த மசோதா மீதான ரஜினியின்  நிலைப்பாடு என்ன எனவும் அதுகுறித்து அவர் கருத்து தெரிவிக்க வேண்டும் என தெரிவித்தார்.
 
திரைப்படத்துறையினர் ஓரணியில் நின்று ஒளிப்பதிவு சட்டதிருத்த மசோதாவை எதிர்க்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.
 
பா.ஜ.க அரசு ஒரே நாடு என்ற நோக்கில் ஒளிப்பதிவு சட்டதிருத்த மசோதாவை கொண்டு வந்துள்ளதாகவும் இது தொழிலை அழிக்கும் முயற்சி எனவும் தொடர்ச்சியாக இது போன்ற வேலைகளில் பா.ஜ.க ஈடுபடுவதாகவும் தங்கர்பச்சான் குற்றச்சாட்டினார்.
 
நாடாளுமன்ற உறுப்பினர்களும் மக்களவையில் இது குறித்து குரல் எழுப்ப வேண்டும் என தெரிவித்தார்.