நடிகர் ரஜினி மீது டிஜிபி அலுவலகத்தில் புகார்.!!!

நடிகர் ரஜினி மீது டிஜிபி அலுவலகத்தில் புகார்.!!!

சிறுத்தை சிவா இயக்கத்துல ரஜினி நடித்து வரும் படம் தான் அண்ணாத்த. இப்படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடிக்கிறாங்க

வரும் தீபாவளிக்கு அண்ணாத்த படம் ரிலீஸ் ஆகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் அதன் போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. 

சமீபத்தில் வெளியான ஃபர்ஸ்ட் லுக்கில் கிராமத்தில் ஜாலியாக வெள்ளை சட்டை வெள்ளை வேஷ்டியில் போஸ் கொடுத்த ரஜினி மாலையில் புல்லட் பைக்கில் கையில் அருவாளுடன் ஒரு காரையே நொறுக்கி தள்ளும் காட்சி இடம்பெற்றதும் கிராமத்து அண்ணாத்த கொல்கத்தாவில் பழிவாங்கும் கதை தான் படமா? என்றே ரசிகர்கள் கதை குறித்த விவாதங்களை கிளப்பி உள்ளனர். 

அதுமட்டுமில்லாமல் அண்ணாத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை ரசிகர்கள் காட்டுமிராண்டித்தனமாக கொண்டாடும் வீடியோ ஒன்று வெளியாகி பகீர் கிளப்பியுள்ளது.  

அதாவது அண்ணாத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பேனருக்கு முன்பு தாரை தப்பட்டையுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ரசிகர்கள் ஒரு ஆட்டு கிடாவை துடிதுடிக்க வெட்டி பலி கொடுத்துள்ளனர்.  இதனை பார்த்த பலரும் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

இப்படி பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் கூடியிருக்கும் இடத்தில் இப்படி ஒரு கொடூரமான செயலை செய்த மேற்படி நபர்களை கண்டித்து தக்க நடவடிக்கை எடுக்குமாறும், இச்செயலை தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் நடிகர் ரஜினிகாந்த் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கபட்டுள்ளது.